பெகாசஸ்: உத்தரவு இல்லாமல் உளவு பார்க்கவில்லை எனில் உத்தரவிட்டது யார்? ப. சிதம்பரம் கேள்வி
சென்னை: பெகாசஸ் உளவு விவகாரத்தில் உத்தரவு இல்லாமல் உளவு பார்க்கவில்லை என மத்திய அரசு கூறுகிறது.. அப்படியானால் உளவு பார்க்க உத்தரவிட்டது யார்? என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் இன்று பதிவிட்டுள்ளதாவது:
உத்தரவு இல்லாமல் யாரையும் உளவு பார்க்கவில்லை என்று அரசு சொல்கிறது. அப்படியென்றால், உத்தரவு பிறப்பித்து உளவு பார்த்தோம் என்று அரசு ஒப்புக்கொள்கிறதா?
உத்தரவு பிறப்பித்தது யார்? எந்த உளவு மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பார்த்தார்கள்? அந்த மென்பொருளின் பெயர் என்ன? எந்த நாட்டு நிறுவனத்திடமிருந்து என்ன விலை கொடுத்து வாங்கினார்கள்? இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவார்கள?
அன்று - ஆக்சிஜன் தட்டுப்பாடே கிடையாது என்று சொன்னார்கள்; இன்று - ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக யாரும் மரணம் அடையவில்லை என்று சொல்லுகிறார்கள்
Recommended Video
அப்படியென்றால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது என்று மோடி அரசு ஒப்புக்கொள்கிறதா?. இவ்வாறு ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.