ரபேல் ஆவணங்களை திருடியவர் ஒரே நாளில் திருப்பி கொடுத்துட்டார் பாருங்களேன்.. ப.சிதம்பரம் செம கிண்டல்
Recommended Video

சென்னை: ரஃபேல் ஆவணங்களை திருடிய திருடன் அதை ஒரே நாளில் திருப்பி கொடுத்து விட்டான் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.
ரபேல் போர் விமானம் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட, சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை ஆஜரான மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையின் போது ஆவணங்கள் திருடப்படவில்லை என்றும், அது நகல் எடுக்கப்பட்டது என்றும் வேணுகோபால் தெரிவித்தார்.

இதுகுறித்து டுவிட்டரில் இன்று காலை ப.சிதம்பரம் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், புதன் கிழமை திருடப்பட்ட ஆவணம் வெள்ளிக்கிழமை நகல் எடுக்கப்பட்ட ஆவணமாக மாறியுள்ளது. ஆவணங்களை திருடி சென்ற திருடன் வியாழக்கிழமை அதை திரும்ப ஒப்படைத்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு கேலியாக தெரிவித்துள்ளார்.
ரபேல் ஆவணம் தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழுக்கு எதிராக சட்டத்தை கொண்டு மிரட்டினார்கள் என்றும் சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், வரும் தேர்தலில் 3 விஷயங்கள்தான் முக்கியமாக பேசப்படப்போகிறது. அவை, வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications