தமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி
சென்னை: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக, இன்று அவர் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்களும், சிதம்பரம் ஆதரவாளர்களும் குவிந்து, வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.
பாஜக ஆட்சியில், நாட்டில் சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. நான் சிறைவாசத்திற்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன். ஆனால் நாட்டில் பல பகுதிகளில் மக்களுக்கு சுதந்திரம் இல்லையே. இப்போதும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 75 லட்சம் மக்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது. நமது நாடு, சுதந்திரத்தைப் பறிக்கக்கூடிய வலதுசாரி பிற்போக்கு பாசிச ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழக மக்கள், பாஜக மீது காட்டுகின்ற எச்சரிக்கை உணர்வை எப்போது இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களும் உணர்கிறார்களோ அப்போதுதான் உண்மையிலேயே இந்தியா சுதந்திர நாடாக மாறும். பாஜக எதிர்ப்புணர்வு மற்ற மாநிலங்களுக்கும் பரவவேண்டும்.
என் மன உறுதியைக் குலைப்பதற்காகத்தான் என்னை சிறையில் அடைத்தார்கள். ஆனால், என்னுடய மன உறுதியை ஒருபோதும் குலைக்க முடியாது. என்னுடைய உடல்நலத்தை குலைக்க வேண்டுமென நினைத்தார்கள். நீதிமன்றத்தின் தலையீட்டால் என்னுடைய உடல்நலத்தை மீட்டெடுத்துள்ளேன்.
இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தொடர்ந்து, இதைப் பற்றி நாட்டு மக்களுடன் பேசுவேன்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. உத்தர பிரதேச மாநிலம், பெண்களுகான கொலைக்களமாக மாறிவருகிறது. இதைத் தடுக்கவேண்டியது பெண்களும், அரசும் மட்டுமல்ல, ஒவ்வொரு ஆணும் தான் இதில் பொறுப்பாளி.
2004 - 2010 வரை 8.5 சதவீத பொருளாதார வளர்ச்சி இருந்தது. இடையே 9 சதவீத வளர்ச்சியை கூட எட்டியது. பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், இது கூட அவர்கள் சொல்லும் பொய்யான புள்ளிவிபரம் தான். பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் பொருளாதார மந்த நிலையிலிருந்து நாட்டை மீட்க முடியும் என எனக்கு தோன்றவில்லை. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications