3 விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதே விவசாயிகள் போராட்ட பிரச்சனைக்கான தீர்வின் முதல் படி: ப. சிதம்பரம்
சென்னை: மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதே 6 மாதங்களாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்ட பிரச்சனைக்கான தீர்வின் முதல் படி என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 6 மாதங்களாக போராடுகின்றனர். இன்று பிரதமர் மோடி பதவி ஏற்று 7 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதனை நாடு முழுவதும் கறுப்பு தினமாக கடைபிடித்தனர் விவசாயிகள், இந்த போராட்டம் தொடர்பாக ப. சிதம்பரம் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
விவசாயச் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் இன்று 6 மாதங்கள் நிறைவு விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கிப் கொள்ள வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, தான் நிறைவேற்றிய பொல்லாத சட்டங்களை விலக்கிக் கொள்கிறோம் என்று ஏன் சொல்ல மறுக்கிறது?

அரசு வினை விதைத்தது. வினை தானே விளையும்? மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக அரசு விலக்கிக் கொள்வதுதான் இந்தப் பிரச்னையின் தீர்வுக்கு முதல் படி. இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications