சுவாசம் காற்றில் கரைந்தாலும் விதைத்த மரக்கன்றுகள் எங்களோடு கலந்திருக்கும்.. "தமிழச்சி" இரங்கல்
சென்னை: சுவாசம் காற்றில் கரைந்தாலும் விதைத்த மரக்கன்றுகள் எங்களுடன் கலந்திருக்கும் என சமூக ஆர்வலர் பத்மப்ரியா தெரிவித்தார்.
நடிகர் விவேக் நேற்றைய தினம் மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திரும்ப வர வேண்டும் என நிறைய பேர் வாழ்த்தியும், கடவுளிடம் பிரார்த்தனை செய்தும் இருந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரவாயல் தொகுதி வேட்பாளரும், சமூக ஆர்வலருமான பத்மப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் காலம் வழி சென்ற கலைஞர் @Actor_Vivek இனி நம்மோடு இல்லை என்பதை ஏற்கமுடியவில்லை.
காலம் வழி சென்ற கலைஞர் @Actor_Vivek இனி நம்மோடு இல்லை என்பதை ஏற்கமுடியவில்லை. உங்கள் சுவாசம் காற்றில் கரைந்து போனாலும் நீங்கள் விட்டுச்சென்ற விதைத்து சென்ற நினைவுகளும் மரக்கன்றுளும் உங்கள் நினைவுகளை சுமந்து எங்களோடு என்றும் கலந்திருக்கும் #RIPVivekSir You will be missed Sir pic.twitter.com/Bxw1wgttLI
— Padma Priya (@Tamizhachi_Offl) April 17, 2021
உங்கள் சுவாசம் காற்றில் கரைந்து போனாலும் நீங்கள் விட்டுச் சென்ற, விதைத்து சென்ற நினைவுகளும் மரக்கன்றுளும் உங்கள் நினைவுகளை சுமந்து எங்களோடு என்றும் கலந்திருக்கும் #RIPVivekSir You will be missed Sir என பத்மப்ரியா தெரிவித்துள்ளார்.