பான் கார்டு + ஆதார் கார்டு இருக்குல்ல.. ஒரேநாள் தான் இருக்கு.. இல்லாட்டி டபுள் மடங்கு காசு போயிரும்
சென்னை: பான் கார்டுடன் ஆதார் எண்ணை வருகிற 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, ஆதார் கார்டுகள், மிக முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது.. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) இந்த கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஆதார் கார்டு: ஏதேனும் முக்கிய இடங்களுக்கு செல்லும்போதும் சரி, எந்த ஒரு அலுவலை துவங்குவதானாலும் சரி ஆதார் கார்டுகளே அவசியமாகின்றன.. ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்று இப்போது ஆகிவிட்டது.
வங்கி கடன் துவங்குவது முதல் வங்கிக்கடன் பெறுவது வரை ஆதார் கார்டு வைத்திருந்தால்தான் சாத்தியம்.. எந்த ஒரு இடத்திலும் அடையாள சான்றாக ஆதார் கார்டு கேட்கப்படுகிறது. இதில் பான் கார்டுகளையும் சேர்த்து கொள்ளலாம். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.
காலக்கெடு: பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, பலமுறை நீட்டிக்கப்பட்டு, இறுதியாக, கடந்தாண்டு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது.. அதற்கு பிறகு, பான் - ஆதார் இணைப்புக்கு, தாமத கட்டணமாக 1,000 ரூபாய் விதிக்கப்பட்டது... அவ்வாறு இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலற்றதாகி விடும் என்ற எச்சரிக்கையையும் வருமான வரித்துறை விடுத்திருந்தது.
இந்நிலையில், வருமான வரித்துறை மீண்டும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: வரி செலுத்துவோர், தங்களின் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை வருகிற 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இணைக்க தவறும்பட்சத்தில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வரி தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் ஜூன் 31ம் தேதியாகும்.
வருமான வரித்துறை: அதிக விகிதத்தில் வரி விலக்குகளை தவிர்க்க வரும் 31ம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும். பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் (டிடிஎஸ் பொருந்தக்கூடிய விகிதத்தில் 2 மடங்கு)" என்று வருமான வரித்துறை அலர்ட் செய்திருக்கிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications