Tamilisai-யை இடித்து தள்ளிய பாதுகாவலர்! சட்டென முகம் மாறிய தமிழிசை! பவன் கல்யாண் செய்தது என்ன?
மதுரை: மதுரை விமான நிலையத்தில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் இசட் பிரிவு பாதுகாவலர் ஒருவர் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனை இடித்து தள்ளிவிட்டுச் சென்ற போது தமிழிசைக்கு சட்டென முகமே மாறிவிட்டது. அடுத்து பவன் கல்யாண் செய்தது என்ன தெரியுமா?

மதுரையில் முருக பக்தர்கள் கலந்து கொள்ளும் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதை இந்து முன்னணி நடத்துகிறது. இந்த மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளும் காட்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் பார்க்கும் பக்தர்கள் பக்தி பரவசம் அடைகிறார்கள்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். காலை 10.10 மணிக்கு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.
விமானம் புறப்படவிருந்த கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் வேறொரு விமானத்தில் அவர் புறப்பட்டார். அது போல் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வரவிருந்த விமானமும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரவிருந்த விமானத்தில் கோளாறு என தகவல் வெளியானது. இதையடுத்து அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வேறொரு விமானத்தில் வந்திருந்தார்.
இந்த நிலையில் பவன் கல்யாணை வரவேற்று மாநாட்டுக்கு அழைத்துச் செல்ல தமிழிசை வந்திருந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் இருந்து தமிழிசை, பவன் கல்யாண் தங்கள் பாதுகாப்பு படையினருடன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கட்டத்தில் திடீரென பவனின் இசட் பிரிவு பாதுகாவலர் ஒருவர் ஒதுங்கி செல்வதாக நினைத்துக் கொண்டு செல்லும் போது தமிழிசையை இடித்து தள்ளினார். அப்போது சட்டென முகம் மாறிய தமிழிசை, "ஏன் இப்படி" என்பது போல் கையசைத்தார்.
இதை பவன் கல்யாண் கவனித்துவிட்டு அந்த அதிகாரியை கடிந்து கொண்டு தமிழிசையை அருகில் அழைத்து வந்து பத்திரமாக விமான நிலையத்திற்கு வெளியே இருந்த காரில் ஏற்றி அனுப்பினார். அது போல் அந்த கார் பின்னாலேயே பவனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரும் மாநாட்டு இடத்திற்கு சென்றது.
மதுரை பாண்டி கோயில் அருகில் அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. மாநாட்டுத் திடல், அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் ஆன்மீக பெரியவர்கள், பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications