நான் ஒருத்தன் உதவி என்ன பிரயோஜனம்? .. புயல் பாதித்த மக்களுக்கு உதவ புஷ்புவனம் குப்புசாமி அழைப்பு
நாகை மக்களுக்கு உதவுமாறு புஷ்பவனம் குப்புசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: "குடிக்க நீர் தர்ற தென்னையை காணோம்.. பால் தர பசுமாட்டை காணோம்.. நாகை மக்களுக்கு நான் ஒருத்தன் உதவி பண்ணி என்ன பிரயோஜனம்? நீங்களும் கொஞ்சம் வாங்களேன்... "என்று பொதுமக்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி அறைகூவல் விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன் மாவட்டத்தின் தற்போதையை அவல நிலையை கண்ணீருடன் பதிவு செய்துள்ளார். வீடியோவில் புஷ்பவனம் குப்புசாமி சொல்லி உள்ளதாவது:
"என் மாவட்டம், என் மக்கள், துன்பத்தில் துவண்டுக்கிட்டு இருக்கேன். நான் ஊருக்கு போனா குடிக்கிறதுக்கு நீர் தருகிற தென்னை மரங்கள் ஒன்னை கூட இல்லை.. பால் தர பசுமாடு உயிரோட இல்லை.. எல்லாம் தரை மட்டமாயிடுச்சி. என்னால பார்க்கவே முடியல.

படுக்க கூட முடியல
நாகையிலிருந்து வேதாரண்யம் வரைக்கும் கடற்கரை கிராமங்களில் ஒரு மரம்கூட இல்லை. எல்லாம் வெட்டவெளியாக கிடக்கு. வீடு இல்லை. சாப்பாட்டுக்கு வழி இல்லை.. கஞ்சிகூட குடிக்க வழி இல்லை.. படுக்க பாய் இல்லை.. மரத்தடியில கூட படுக்க முடியாம ஈரமா இருக்கு. என் மக்கள் கஷ்டப்படுவதை தாங்க முடியல.

உதவி செய்யுங்கள்
தமிழக அரசு அல்லது பொதுநல அமைப்புகள், அல்லது தனியார் அமைப்புகள் யாராக இருந்தாலும் சரி, தயவு செய்து நாகப்பட்டினத்துக்கு வந்து உதவுங்கள். நான் ஒருத்தனால் என்ன செய்ய முடியும்? எனவே தமிழ் உணர்வோடு உணவோ, உடையோ எதுவானாலும் நாகை மக்களுக்கு உதவி செய்யுங்கள்.

நான் போய்ட்டு வரேன்
நேரடியாக உங்களால் நாகைக்கு போக முடியவில்லை என்றால் எனக்கு தொடர்பு கொண்டு உங்கள் நிவாரண பொருட்களை கொடுங்கள். நான் போய் கொடுத்திட்டு வர்றேன். நான் நாகை மக்களுக்கு மருந்து, உள்ளாடைகள், அத்தியாவசிய பொட்களை தந்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனா அது பத்தலை.

மருந்துகள் இல்லை
அங்கே பிள்ளைகளுக்கு சாப்பாடு இல்லை. நாம் கொடுக்கும் அரிசி அவர்களுக்கு பத்தவில்லை. முதியவர்கள், குழந்தைகளுக்கு போர்த்தி கொள்ள போர்வைகள் இல்லை.. காய்ச்சலுக்கு மருந்துகள் இல்லை.. அதனால் இதுபோன்ற உதவிதான் இப்போது உடனடி தேவையாக இருக்கிறது"

வீடியோ வைரல்
இவ்வாறு கண்ணீருடன் சொல்லி முடித்தார் புஷ்பவனம் குப்புசாமி. இதையடுத்து இது தொடர்பான ஒரு பாடலையும் பாடியுள்ளார். நா தழு தழுக்க புஷ்பவனம் பேசி வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications