கொரோனா தடுப்பூசி போட்டுக்கணுமா.. க்யூவ்ல நிக்க வேணாம்.. இப்படி போய் அப்படி வந்துடலாம்!
சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்க வேண்டும் என்றால் கியூவில் நிற்க வேண்டாம். வேகமாக போட்டுகிட்டு வந்துவிடும் அளவுக்கு தற்போது வசதிகளை தமிழக அரசு செய்துள்ளது.
Recommended Video
கொரோனா பரவலை தடுக்க தற்போதைய தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக பாதிப்புகளும், உயிரிழப்பும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனிடையே, வரும் அக்டோபர் மாதம் கொரோனா 3-ம் அலையின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று முதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த்து.

டிஎம்எஸ் அலுவலகம்
அதன்படி முதலில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள டிபிஎச் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதுகுறித்து மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்தனர்.

24 மணி நேரம்
இதுகுறித்து தெரிவித்த பொதுமக்கள், 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படுவது வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். டோக்கன் வாங்கி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டாம். கூட்ட நெரிசலில் கொரோனா பரவும் அச்சமின்றி, எந்த நேரத்திலும் ஊசி போட்டு கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

தமிழக அரசு
இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கும், மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்வதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சென்னையை பொறுத்தவரை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு முத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று முதல் 24 மணி நேரமும்
இதைபோல் தமிழகம் முழுவதும் இன்று முதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன. கொரோனா பரவலின் 3ஆவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். இந்த 3ஆவது அலையானது அக்டோபர் மாதம் உக்கிரமாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. இத்தனை தினங்களாக தமிழகம் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசிகள் குறைந்த அளவில் காணப்பட்டன. இதனால் மக்கள் தினந்தோறும் வரிசையில் நின்று காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்றனர். இந்த நிலையில் இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

தடுப்பூசி போடாதவர்கள்
மேலும் கொரோனா தடுப்பூசி போடாதவர்களைத்தான் இந்த கொரோனா 3-ஆவது அலை தாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 100 சதவீதம் தடுப்பூசியை போட அரசு தீவிரம் காட்டியுள்ளது. குழந்தைகளுக்கு போடக் கூடிய சைகோவ் டி தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications