முதியோருக்கு கொரோனா தடுப்பூசி...சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பெரும் பின்னடைவு..!
சென்னை: 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில், சென்னையை தவிர தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் பெரும் பின்னடைவு காணப்படுகிறது..
Recommended Video
சென்னையின் மொத்த மக்கள் தொகை அடிப்படையில் 70.64 % முதியோர் இதுவரை கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுள்ளனர்.
இதனிடையே சென்னையுடன் மற்ற மாவட்டங்களை குறிப்பாக ஊரக பகுதிகள் நிறைந்த மாவட்டங்களை ஒப்பிடும் போது அங்கு களநிலவரம் மிக மோசமாகவும், கவலையளிக்கும் வகையிலும் இருக்கிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. பிறகு அந்த நடைமுறையில் மாற்றம் செய்து 45 வயதாக குறைக்கப்பட்டு, இன்று 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலேயே 60 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

மக்கள் தொகை
இதற்கு அடுத்தப்படியாக அதிக மக்கள் தொகை மற்றும் பெருநகரங்கள் வரிசையில் கோவை இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 26.2% முதியோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுள்ளனர். இதனிடையே மக்கள் தொகை குறைவாக உள்ள நீலகிரி மாவட்டத்தில் 43.2% முதியோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேற்கண்ட இந்த மூன்று மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் முதியோர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி விகிதங்களை ஆராய்ந்தால் முடிவு கவலையளிக்கும் வகையில் உள்ளது.

பெரும் இடைவெளி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21% முதியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 10 -20 %-ற்குள் முதியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் வரிசையில் திருவண்ணாமலை, நாமக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர், திருச்சி, உள்ளிட்ட 21 மாவட்டங்கள் வருகின்றன. சென்னையை ஒப்பிட்டு பார்க்கும் போது முதியோருக்கு தடுப்பூசி போடும் விவகாரத்தில் இந்த மாவட்டங்களில் ஒரு பெரும் இடைவெளி இருக்கிறது.

மிக மோசமான
சரி இது தான் இப்படி இருக்கிறது என்றால் இதை விட மிக குறைந்த அளவில், அதாவது வெறும் 5-10% முதியோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களில் கரூர், அரியலூர், நாகை, திருவாரூர், திருநெல்வேலி, உள்ளிட்ட இடங்கள் இருக்கின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் மிக மோசமான நிலையில் இருப்பதாக மே 7-ம் தேதி கிடைத்த ஆய்வு முடிகள் கூறுகின்றன.

மே 7-ம் தேதி
மேலும், மே 7-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 85% மட்டுமே (வீணடிப்பு உட்பட) தமிழகம் பயன்படுத்தியிருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. அதேவேளையில் ஒடிசா 96%, கேரளா 95%, மேற்கு வங்கம் 95% கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்தியிருப்பதும் தெரிய வருகிறது.

அளவுமுறை
இதனிடையே கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் அளவுமுறை இருப்பதால், அதிகம் கொரோனா பாதிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பயன்படுத்தப்படுவதாகவும் அந்த வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, கோவை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள முதியோருக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது எனவும் பெயர் வெளியிட விரும்பாத சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications