இன்றும் நாளையும் வானில் நடக்கப்போகும் அதிசயம்! வெறும் கண்ணால் பார்க்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் விண்கல் மழை பூமியின் மீது பொழிகிறது. இது அறிவியல் ஆச்சரியங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விண்கல் மழை ஆகஸ்ட் மாதம் 12-13ம் தேதி பொழிகிறது. இதனை நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியும்.
இந்த பூமியே விண்கற்கள் மோதலால்தான் உருவானது. தினந்தோறும் பூமியின் மீது விண்கற்கள் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. சரி இந்த விண்கற்கள் எங்கிருந்து வருகிறது தெரியுமா? பொதுவாக இப்படியான விண்கற்கள் வால்நட்சத்திரங்களிலிருந்துதான் பூமிக்கு வருகிறது. அதாவது, வால் நட்சத்திரங்கள் சென்ற பாதையில் அது விட்டுச் சென்ற தூசி துகள்கள் இருக்கும்.

விண்வெளியில் காற்று இல்லாததால் இந்த துகள்கள் எங்கேயும் போகாது. இந்நிலையில் பூமி இந்த துகள்கள் இருக்கும் பாதை அருகே போகும்போது அந்த துகள்கள் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு விண்கல் மழையாக பூமியில் விழும். தற்போது ஸ்விஃப்ட்-டட்டில் வால் நட்சத்திரம் கடந்து சென்ற பாதையின் அருகே பூமி செல்வதால் இன்றும் நாளையும் பூமியில் விண்கல் மழை தெரியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஸ்விஃப்ட்-டட்டில் எனும் வால் நட்சத்திரம் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும். அப்படி சமீபத்தில் வந்தபோது அதன் வாலிலிருந்து தூசிகளை, சிறு கற்களை விட்டு சென்றிருக்கிறது. இதன் அருகே பூமி இன்றும் நாளையும் செல்கிறது. இதனால் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் உங்களால் விண்கல் மழையை பார்த்து ரசிக்க முடியும்.

நீங்கள் இருக்கும் இடத்தில் ஒளி மாசு குறைவாக இருப்பின், அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்கு 50-100 விண்கற்கள்கள் பூமியை நோக்கி விழுவதை பார்க்க முடியும். இதற்கு பெர்சீட்(Perseid) விண்கல் பொழிவு என ஆய்வாளர்கள் பெயர் வைத்திருக்கின்றனர். இந்த விண்கல் மழையானது ஆகஸ்ட் 24 வரை நீடிக்கும். இருப்பினும் இன்றும் நாளையும்தான் வானில் அதிக அளவு பொழிவு இருக்கும்.
இதை வடக்கு அரைகோளத்தில் உள்ள நாடுகளில் மட்டுமே பார்க்க முடியும். இந்தியா இந்த பகுதியில் இருப்பதால் நம்மாலும் பார்க்க முடியும். இந்தியா தவிர சீனா, ஜப்பான், கொரியா, தென்கிழக்கு ஆசியா (இந்தோனேசியா மற்றும் மலேசியா தவிர), சைப்ரஸ், கிரீஸ் மற்றும் துருக்கி தவிர அனைத்து ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, கனடா, அமெரிக்கா, மெக்சிகோ, வட ஆப்பிரிக்கா, எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ, ஓசியானியா, வடக்கு மரியானா தீவுகள் ஆகிய பகுதிகளும் இதை பார்க்க முடியும்.
விண்கல் என்றாலே நமக்கு ஒருவித அச்சம் இருக்கும். ஏனெனில் விண்கல் மோதிதானே ஒரு காலத்தில் டைனோசர்கள் அழிந்து போனது. எனவே தற்போது பெய்யும் விண்கல் மழை பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா? என்று பலர் கேள்வியெழுப்புகின்றனர். இதற்கும் விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர்.
அதாவது, "விண்கற்கள் அளவில் சிறியவை. அவை விட்டுச் செல்லும் துகள்கள் அதிலும் மிகச் சிறியவை. தற்போது இந்த துகள்கள்தான் பூமியில் விழுகிறது. விண்கல் அல்ல. மற்றொரு விஷயம் என்னவெனில், பூமியின் மீது விழும் இந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் உரசி தீப்பிடித்து எரிந்துவிடும். எனவே இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது இவ்வாறு தீப்பிடித்து எரிவதன் காரணமாகதான் நமக்கு விண்கல் மழை தெரிகிறது. ஆகவே இதனை வெறும் கண்களால் தாராளமாக பார்க்கலாம்.
இதனை தமிழ்நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் ஒளி மாசு குறைவாக உள்ள இடத்தில் இருந்து பார்த்தால் இதன் அழகை முழுமையாக ரசிக்கலாம். சென்னைக்கு அருகில் எனில் ஏலகிரியில் ஒளி மாசு குறைவு. அதேபோல வாணியம்பாடி ஆலங்காயம் அருகே உள்ள காவலூரில் வைணு பாப்பு விண்வெளி ஆய்வகம் இருக்கிறது. இங்கும் ஒளி மாசு குறைவுதான். இந்த இடங்களிலிருந்து பார்த்தால் விண்கல் மழையை முழுமையாக ரசிக்க முடியும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications