உங்கள் காதுகளை வைத்தே நீங்கள் யார், எப்படிப்பட்டவர்னு புட்டு புட்டு வைத்துவிடுவோமே!
சென்னை: உங்கள் காதுகளை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை எங்களால் சொல்ல முடியும். ஜாதகம் இருந்தால் மட்டும்தான் என்றில்லை, இது போன்ற உறுப்புகளை வைத்தும் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லிவிடலாமே!
ஒவ்வொரு மனிதனுக்கு என தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அது அவர்களுடன் பழகும்போதுதான் வெளிப்படும். ஆனால் ஒருவரின் கைவிரல்கள், கால் விரல்கள், நிற்கும் நிலை, அமரும் ஸ்டைல், கால் மேல் கால் போடும் ஸ்டைல் உள்ளிட்டவைகளை வைத்தே குணங்களை சொல்லிவிடலாம்.

ரத்த வகையை வைத்து கூட ஒரு நபர் எப்படி இருப்பார் என சொல்லப்பட்டதை எல்லாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் தற்போது காதுகளை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லலாமே!
உங்கள் காதுகளை கண்ணாடியில் பார்த்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் காது சிறியதாக இருக்கிறதா பெரியதாக இருக்கிறதா என பாருங்கள். காது மடல்களிலேயே மறைமுகமாக உங்கள் கேரக்டர் இருக்கும்.
பெரிய காதுகள்

பெரிய காதுகள் என்றால் நீங்கள் மனதில் பட்டதை தைரியமாக பேசுபவர்கள். பதற்றமான சூழலில் கூட நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பீர்கள். உங்கள் நம்பிக்கையை மக்கள் போற்றுவார்கள். அவ்வப்போது உங்களிடம் ஆலோசனைகளை பெறுவார்கள். உண்மையை பேச நீங்கள் எப்போதுமே பயப்பட மாட்டீர்கள்.
உங்கள் வாழ்க்கையை ஒரு குதூகலமான சாகசமாகவே பார்ப்பீர்கள். எந்த சந்தர்ப்பங்களையும் உற்சாகமாக எடுத்துக் கொள்வீர்கள். மன அழுத்தமும் கவலையும் எப்போதாவது உங்களுக்கு ஏற்படும். ஆனாலும் அந்த தருணத்தையும் நீங்கள் மகிழ்வாக கடத்துவீர்கள்.
நடந்த காலத்தையோ நிகழ் காலத்தை பற்றியோ கவலைப்பட மாட்டீர்கள். எதுவும் கடந்து போகும் என்ற மனநிலையை கொண்டிருப்பீர்கள். புதிய புதிய நபர்களை சந்திப்பீர்கள். அடுத்த சாகசத்திற்கு போராட்டத்திற்கு எப்போது தயாராவீர்கள்.
சிறிய காதுகள்

உங்களுக்கு சிறிய காதுகள் இருக்கிறது என்றால் நீங்கள் எப்போதும் எதையாவது நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். யாரிடமும் அவ்வளவு எளிதில் பேச மாட்டீர்கள். உங்கள் மனதில் தோன்றுபவைகளை யாரிடமும் பகிராமல் மனதிற்குள்ளேயே வைத்து புழுங்குவீர்கள். எதையும் கவனமாக கையாள நினைப்பீர்கள். உங்கள் சுற்றுவட்டாரங்களை எப்போதும் கவனித்து அலர்ட் மோடில் இருப்பீர்கள். புதியவர்களிடம் பேசவே வெட்கப்படுவீர்கள். உங்களை அடுத்தவர்களிடம் இருந்து பாதுகாக்க எப்போதும் எச்சரிக்கையாக இருப்பீர்கள். புரணி அல்லது கிசு கிசு பேசுவதை விட அர்த்தமுள்ள உரையாடல்களையே விரும்புவீர்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை விரும்ப மாட்டீர்கள். உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் நன்றாக பழகுவீர்கள்.
நீங்கள் எழுத்தாளர், ஆராய்ச்சியாளர், உளவியல் நிபுணர், தரவு ஆய்வாளர், நூலகர், விஞ்ஞானி, கட்டடவியல் நிபுணர், அக்கவுன்ட்டன்ட், உள்ளிட்ட பணிகளில் இருப்பீர்கள்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications