கொலை செய்து 2 மாசமாச்சு.. இன்னும் கிடைக்காத தலை.. பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தியாவின் உடல்
சந்தியாவின் உடல் பாகங்கள் அவரது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
சென்னை: கொலை பண்ணி இரண்டரை மாசம் ஆச்சு.. சந்தியாவின் தலை கிடைக்கவே இல்லை.. எவ்வளவு தேடியும் தலை கிடைக்காத நிலையில், அவரது மற்ற உடல் பாகங்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.
தமிழகத்தையே நடுங்க வைத்தது பெருங்குடி கொலை! நாகர்கோவிலை சேர்ந்த சந்தியா என்ற பெண் நம்மால் கற்பனையே பண்ண முடியாத அளவுக்கு மிக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்!
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன்தான் கொலையாளி என்பது நிரூபணமானது.

உடல் பாகங்கள்
பின்னர் அவர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் சந்தியாவின் உடல் பாகங்கள் ஒவ்வொரு பகுதியில் வீசப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஒவ்வொரு இடங்களிலும் தேடியலைந்து, சந்தியாவின் உடல் பாகங்களான இடுப்பு பகுதி, கை, கால்கள் கிடைத்தன. ஆனால் தலை கிடைக்கவே இல்லை.

போலீசார் கடும் முயற்சி
சந்தியாவின் தலை எங்கே என்பதை கண்டுபிடிக்க போலீசாரும் அதிக சிரமம் எடுத்து கொண்டனர். ஆனால் இரண்டரை மாதங்களாகியும் சந்தியாவின் தலை மட்டும் கிடைக்கவே இல்லை. ஏனெனில் தலை இருந்தால்தான் கொலை செய்யப்பட்டது சந்தியா என்பது முழுதாக அறிய முடியும்.

உடல் பாகங்கள்
அதனால் தலை கிடைக்காததால், கிடைத்த உடல் பாகங்களை வைத்து டிஎன்ஏ டெஸ்ட் செய்தால், அதன்மூலம் கொலை செய்தது சந்தியா என்பது தெரியவரும் என்று சொல்லப்பட்டது.

சொந்த கிராமம்
இந்த நிலையில், சந்தியாவின் உடல் பாகங்களை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். இன்று சென்னை வந்த அவர்களிடம் உடல் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து சந்தியாவின் சொந்த கிராமத்தில் உடல் பாகங்கள் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

டிஎன்ஏ டெஸ்ட்
ஆனால் "இவ்வளவு நாள் ஆகியும் ஏன் இன்னும் டிஎன்ஏ சோதனை செய்யப்படவில்லை" என்பது சந்தியா குடும்பத்தினர் கேள்வியாக உள்ளது. கோர்ட் அனுமதி கிடைத்ததும் சோதனை முறையாக நடத்தப்படும் என்பது போலீஸ் தரப்பின் விளக்கமாக உள்ளது! ஆனால் கடைசி வரை சந்தியாவின் தலையை கண்டுபிடிக்கவே முடியவில்லை!
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications