கொலை செய்து 2 மாசமாச்சு.. இன்னும் கிடைக்காத தலை.. பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தியாவின் உடல்
சந்தியாவின் உடல் பாகங்கள் அவரது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
சென்னை: கொலை பண்ணி இரண்டரை மாசம் ஆச்சு.. சந்தியாவின் தலை கிடைக்கவே இல்லை.. எவ்வளவு தேடியும் தலை கிடைக்காத நிலையில், அவரது மற்ற உடல் பாகங்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.
தமிழகத்தையே நடுங்க வைத்தது பெருங்குடி கொலை! நாகர்கோவிலை சேர்ந்த சந்தியா என்ற பெண் நம்மால் கற்பனையே பண்ண முடியாத அளவுக்கு மிக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்!
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன்தான் கொலையாளி என்பது நிரூபணமானது.

உடல் பாகங்கள்
பின்னர் அவர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் சந்தியாவின் உடல் பாகங்கள் ஒவ்வொரு பகுதியில் வீசப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஒவ்வொரு இடங்களிலும் தேடியலைந்து, சந்தியாவின் உடல் பாகங்களான இடுப்பு பகுதி, கை, கால்கள் கிடைத்தன. ஆனால் தலை கிடைக்கவே இல்லை.

போலீசார் கடும் முயற்சி
சந்தியாவின் தலை எங்கே என்பதை கண்டுபிடிக்க போலீசாரும் அதிக சிரமம் எடுத்து கொண்டனர். ஆனால் இரண்டரை மாதங்களாகியும் சந்தியாவின் தலை மட்டும் கிடைக்கவே இல்லை. ஏனெனில் தலை இருந்தால்தான் கொலை செய்யப்பட்டது சந்தியா என்பது முழுதாக அறிய முடியும்.

உடல் பாகங்கள்
அதனால் தலை கிடைக்காததால், கிடைத்த உடல் பாகங்களை வைத்து டிஎன்ஏ டெஸ்ட் செய்தால், அதன்மூலம் கொலை செய்தது சந்தியா என்பது தெரியவரும் என்று சொல்லப்பட்டது.

சொந்த கிராமம்
இந்த நிலையில், சந்தியாவின் உடல் பாகங்களை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். இன்று சென்னை வந்த அவர்களிடம் உடல் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து சந்தியாவின் சொந்த கிராமத்தில் உடல் பாகங்கள் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

டிஎன்ஏ டெஸ்ட்
ஆனால் "இவ்வளவு நாள் ஆகியும் ஏன் இன்னும் டிஎன்ஏ சோதனை செய்யப்படவில்லை" என்பது சந்தியா குடும்பத்தினர் கேள்வியாக உள்ளது. கோர்ட் அனுமதி கிடைத்ததும் சோதனை முறையாக நடத்தப்படும் என்பது போலீஸ் தரப்பின் விளக்கமாக உள்ளது! ஆனால் கடைசி வரை சந்தியாவின் தலையை கண்டுபிடிக்கவே முடியவில்லை!
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications