14வது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய சென்னை நிலவரம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலை 14வது நாளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 82.27 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.29 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் கால நஷ்டத்தை ஈடு செய்ய, கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு. இதையடுத்து இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட ஆயில் நிறுவனங்கள், கடந்த 7ம் தேதி முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர்.

Petrol and diesel prices continue to rise for the 14th consecutive day

தமிழகத்தில் நேற்று, ஒரு லிட்டர் பெட்ரோல் 81.82 ரூபாய்க்கும் டீசல் 74.77 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில் இன்று, ஒரு லிட்டர் பெட்ரோல் 45 காசுகள் உயர்ந்து 82.27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 52 காசுகள் அதிகரித்து 75.29 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த 14 நாட்களில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 6.73 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 7.07 ரூபாயும், விலை உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+