ஆஹா.. 12 நாட்களில் குறைந்த பெட்ரோல் விலை இவ்வளவா? எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான்!
சென்னை: பெட்ரோல் விலை கடந்த 12 நாட்களில் ரூபாய் 3.24 அளவுக்கு குறைந்துள்ளது. என்ன.. ஏதேனும் நாட்டில் அதிசயம் நடந்து விட்டதா என்று நீங்கள் நினைக்கக் கூடும். இது அதிசயம் அல்ல தேர்தல் அரசியல்.
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலை 19 நாட்களுக்கு மாற்றப்படாமலேயே இருந்தது. ஆயில் நிறுவனங்களை அரசு கட்டுப்படுத்தவில்லை என்று சொன்னாலும் இதுதான் யதார்த்தம்.
எண்ணெய் நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களாக வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் உயர்த்தின.

கொந்தளிப்பு
பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதால் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. எதிர்ப்புகளால், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை, தலா ரூ.2.50 குறைத்தது. இருப்பினும் அடுத்த வாரத்திலேயே அதைவிட உயர்ந்தன எரிபொருள் விலைகள்.

சென்னையில் பெட்ரோல் விலை
இந்த நிலையில்தான், கடந்த 11 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று, சென்னையில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 32 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.82.86 ஆகவும், டீசல் 21 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.78.08 ஆகவும் விற்பனை செய்யப்பட்டுகிறது.

12 நாட்களாக குறைந்த பெட்ரோல் விலை
கடந்த 12 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.3.24 குறைக்கப்பட்டுள்ளது. டீசல் ரூ.1.96 குறைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில், ஒரே ஒரு நாள் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

தேர்தல்
தெலுங்கானா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோராம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநில தேர்தல்கள் நவம்பரில் நடைபெறுவதால்தான், விலை ஏற்றப்படாமல் உள்ளது என்பதே அரசியல் விமர்சகர்கள் பார்வையாக உள்ளது.












Click it and Unblock the Notifications