சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கத்தியை காட்டி மிரட்டிய செல்போன் கொள்ளையன்.. கூச்சலிட்ட 23 வயது இளைஞர்.. சென்னையில் கொடூர கொலை!

சென்னை பொழிச்சலூரில் செல்போன் பறிப்பவர்கள் கத்தியால் குத்தியதில் 23 வயது இளைஞர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பொழிச்சலூரில் செல்போன் பறிப்பவர்கள் கத்தியால் குத்தியதில் 23 வயது இளைஞர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெருநகரங்களில் சமீப காலங்களில் செல்போன் திருட்டு, நகை திருட்டு அதிகமாகிக் கொண்டே வருகிறது. முக்கியமாக தென்னிந்தியாவில் சென்னை, பெங்களூரில் செயின், செல்போன் ஸ்னாட்ச்சிங் வகை திருட்டு மிக மிக அதிகமாகிவிட்டது.

இரவு அல்லது அதிகாலை நேரங்களில் வேகமாக பைக்கில் செல்லும் நபர்கள் போன் பேசிக்கொண்டு செல்பவர்களின் போன்களை பிடுங்கி செல்வது, நகைகளை பிடுங்கி செல்வது போய் தற்போது கத்தி வைத்து மிரட்டி போன்களை பறிப்பது கூட நடந்து வருகிறது.

சென்னையில் ஒருநாள்

சென்னையில் ஒருநாள்

அந்த வகையில் சென்னையில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அசம்பாவிதத்தில் முடிந்து இருக்கிறது. சென்னை பொழிச்சலூரில் சமீப நாட்களில் வழிப்பறி கொள்ளையர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டது. இந்த நிலையில் நேற்று பொழிச்சலூரில் ஓட்டல் ஊழியர் 23 வயது நிரம்பிய ராஜகண்ணன் என்பவர் தன்னுடைய பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

புலிப் பாய்ச்சலில் வசந்தகுமார்... கன்னியாகுமரி இவர் புலிப் பாய்ச்சலில் வசந்தகுமார்... கன்னியாகுமரி இவர் "கை"வசமாக் கூடுமாம்.. பரபரக்கும் தேர்தல் களம்

என்ன நடந்தது

என்ன நடந்தது

பொழிச்சலூரில் வெறும் 3 கிமீ தூரத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு அவர் நடந்தபடி சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கே மர்ம வழிப்பறி கொள்ளையன் கத்தியை வைத்து ராஜகண்ணனை மிரட்டினார். செல்போனை தரும்படி கூறி வயிறில் கத்தியை வைத்து மிரட்டினார்.

ராஜகண்ணன் என்ன செய்தார்

ராஜகண்ணன் என்ன செய்தார்

இந்த நிலையில் செல்போனை தர மறுத்து ராஜகண்ணன் அந்த நபருடன் சண்டையிட்டார். பதற்றத்தில் ராஜகண்ணன் கத்தி கூச்சலிட்டு இருக்கிறார். சுமார் 11 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து செல்போனை தர மறுத்ததால் ஓட்டல் ஊழியர் ராஜகண்ணனை கொள்ளையன் கத்தியால் குத்திவிட்டு பைக்கில் மாயமானான்.

பலி

பலி

இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அதிகாலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பலியானார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

English summary
Phone Snatching man murdered a 23-year-old guy in Chennai yesterday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X