மாத உதவித் தொகையை உயர்த்திட கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்.. அமைச்சர் பேச்சுவார்த்தையால் வாபஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகை ரூ 1000 ஆகவும், கடுமையான பாதிப்பு கொண்டவர்களுக்கு 1500 ஆகவும் வழங்கப்படுகிறது. இதில் கடுமையாக பாதிப்பு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 200 உயர்த்தி மாதம் ரூ 1700 உதவித் தொகை வழங்க அரசாணை அண்மையில் வெளியானது.

புதுவையில் எவ்வளவு

புதுவையில் எவ்வளவு

இந்த நிலையில் புதுவையில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மாதந்தோறும் ரூ 3800, தெலுங்கானாவில் ரூ 3106 வழங்கப்படுகிறது. புதுவை, தெலுங்கானாவை போல் தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

 மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள்

அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.1000லிருந்து ரூ.3000ஆகவும், கடுமையான பாதிப்பு கொண்டவர்களுக்கு ரூ.1700லிருந்து ரூ.5000ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற இவர்களது கோரிக்கை
பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து இன்றைய தினம் சென்னையில் போராட்டம் நடத்துவதாக அச்சங்கம் அறிவித்திருந்தது.

போராட்டம்

போராட்டம்

இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில் மூலம் சென்னை வந்த மாற்றுத் திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர். குறிப்பாக கோயம்பேட்டில் மட்டும் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எனினும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று 500- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். இதனால் வாலாஜா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வாபஸ்

மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வாபஸ்

இதையடுத்து சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசின் நிதி நிலையை பொருத்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+