பஞ்சாயத்து ஓவர்.. ஓபிஎஸ், தினகரனுக்கு கிரீன் சிக்னல்?.. பியூஷ் கோயல் ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: என்.டி.ஏ. கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை இணைக்க பச்சை கொடி காட்டி நீண்ட நாள் பஞ்சாயத்துக்கு பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளாதாகவும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு 3 தொகுதிகள், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வந்திருந்தார். பின்னர், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தல், கள நிலவரம், செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்தப் பேச்சுவார்த்தை ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இதில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டது. அதில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு 3 தொகுதிகள், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க எடப்பாடி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
என்.டி.ஏ. கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை இணைக்க பச்சை கொடி காட்டி நீண்ட நாள் பஞ்சாயத்துக்கு பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த சந்திப்பு சிறப்பாக நடைபெற்றுள்ளது. 2026 சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தேர்தல் பணி, மக்கள் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் செயல்படுவோம். வேலைவாய்ப்பு, வளர்ச்சி இதுவே எங்களுடைய இலக்கு. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலோடு தன்னம்பிக்கையோ தேர்தலை எதிர்கொள்வோம். எப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தல் எதிர்கொள்ளப்படும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். ஊழல் திமுகவின் கூட்டணியை தோற்கடிப்போம் என்றார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications