நிலைமை கைமீறுது.. உடனே பிளான் Bயை களமிறக்கிய விஜய்.. இது லிஸ்ட்லயே இல்லையே.. முக்கிய மூவ்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (டிவிகே) முதல் பொது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலைக்கு 50,000க்கும் மேற்பட்டோர் வருகை தந்ததால் விழுப்புரம் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டில் 2 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக மாநாட்டால் 10 முதல் 15 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளது.
வி.சாலை பகுதியில் இருந்து முண்டியம்பாக்கம் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. ஆரம்பத்தில், காலை 10 மணிக்கு மாநாட்டு திடல் திறக்க திட்டமிடப்பட்டது, ஆனால் அதிக கூட்டம் இருந்ததால், ஏற்பாட்டாளர்கள் அதை முன்னதாகவே திறந்தனர்.

மாநாட்டு இடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பூஜ்ஜிய போக்குவரத்து முறையை அதிகாரிகள் செயல்படுத்தினர். அதன்படி வேறு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நிகழ்வு தொடர்பான வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர். இது தாமதங்களைத் தடுக்க உதவும்.
போக்குவரத்தை மேலும் எளிதாக்க, சென்னை மற்றும் திருச்சி இடையே செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுமதிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னை செல்லும் வாகனங்கள் திண்டிவனத்திலும், திருச்சி செல்லும் வாகனங்கள் செஞ்சி அருகேயும் திருப்பி விடப்படும். தமிழக வெற்றி கழக மாநாடு தொடங்க இன்னும் சில மணி நேரம் இருக்கும் நிலையில் எதிர்பார்த்ததை விட அதிக பேர் வந்துள்ளனர்.
அதற்குள்ளாகவே மாநாட்டு பந்தல் 90 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பியது. தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக மாநாட்டு பந்தலுக்கு வர தொடங்கி உள்ளனர். இன்று மாலைதான் கூட்டம் நடக்கிறது. ஆனால் நேற்று இரவே மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே வந்துள்ளனர். மக்கள் பலரும் அதிகாலையே குடும்பம் குடும்பமாக வந்தனர்.
பொதுவாக அரசியல் கூட்டங்களுக்கு மக்கள் குடும்பமாக வர மாட்டார்கள். ஆனால் இந்த முறை விஜய்யின் முதல் மாநாட்டிற்கு விஜய்யை பார்க்க.. படம் பார்ப்பது போல மக்கள் கூட்டம் கூட்டமாக வர தொடங்கி உள்ளனர். கூட்டத்தின் முன் வரிசையில் அமர்வதற்கு.. இப்போதே மக்கள் பலர் வந்து அமர்ந்து உள்ளனர்.
இன்னும் லட்சக்கணக்கான பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிளான் பி யாக தனியாக 9 ஏக்கர் நிலம் தொண்டர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது அருகிலேயே பெரிய கிரவுண்டு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு மூன்று பெரிய டிஜிட்டல் திரைகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் சேர்களை உடைத்துக்கொண்டு இப்போதே அங்கு அமர தொடங்கி உள்ளனர். அங்கே வைக்கப்பட்டு இருந்த பேரிகேட்கள் கூட உடைக்கப்பட்டு உள்ளன. பலரும் இரவே வந்து இடம் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் தவெக மாநாட்டின் முகப்பு பகுதிக்கு எதிரேவுள்ள சாலையின் நடுவே அமைந்திருக்கும் சென்டர் மீடியனில் பலரும் அமர்ந்தனர்.
இங்கே தற்போது 50 மருத்துவர்கள் மற்றும் 150 செவிலியர்கள் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பிற்கான பணியில் ஈடுபட உள்ளனர்.
மொத்தம் 18 மெடிக்கல் கேம்ப் மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து ஆம்புலன்சிலும் ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும். மேலும் உடனடி சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் அதில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications