இந்த ஏரியாக்காரர்கள்லாம் 9 மணிக்கு ரெடியாகிடுங்க.. கரண்ட் போய்டும்!
சென்னை: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை ஏற்பட போகிறது தெரியுமா?
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் சனிக்கிழமைகளில் டிரான்ஸ்பார்மரில் பராமரிப்பு பணிகளை செய்யும். அவ்வாறு பராமரிப்பு பணிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்தால்தான் அந்த பொருள் நீடித்து உழைக்கும்.
இல்லாவிட்டால் எதிர்பாராத நேரத்தில் காலை வாரிவிட்டுவிடும். இதற்காக சனிக்கிழமைகளில் ஒவ்வொரு பகுதி வாரியாக மின்தடை செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.

அந்த வகையில் சென்னையின் முக்கிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் துரைப்பாக்கம் ஈஸ்வரன் கோயில், ராஜு நகர், டிவிஎச் அடுக்குமாடி குடியிருப்புகள், விஓசி தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
வியாசர்பாடி: மாத்தூர் தொழில் பூங்கா, பொன் நகர், மும்தாஜ் நகர், பார்வதி புரம், அன்னை நகர், மஞ்சம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்: ராதா நகர், சாந்தி நகர், ஸ்டேஷன் ரோடு, காமராஜர் தெரு, கட்டபொம்மன் தெரு, பாரதியார் தெரு, கலைமகள் தெரு, காந்தி நகர் முடிச்சூர், லட்சுமி நகர், பெரியார் நகர், ஸ்ரீபாலாஜி நகர், ஏஎல்எஸ் தோட்டம், ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பொன்னேரி : புதிய கும்மிடிப்பூண்டி, பாப்பான் குப்பம், சித்தராஜா கண்டிகை, எளவூர், ஆரம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications