விஜய்க்கு திடீரென போன் போட்ட பிரதமர் மோடி! முதல்வராக பதவியேற்றதற்கு வாழ்த்து!
சென்னை: பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், விஜய்க்கு வாழ்த்து கூறியிருந்த நிலையில், தொலைபேசி வாயிலாக விஜய்யிடம் பேசி வாழ்த்து கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, முதல்வராக பதவியேற்றுக்கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

விஜய்க்கு பிரதமர் மோடி மட்டுமின்றி பல்வேறு மாநில முதல்வர்களும் வாழ்த்தும் பாராட்டும் கூறியுள்ளனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், விஜய்க்கு வாழ்த்து கூறியிருந்த நிலையில், தொலைபேசி வாயிலாக விஜய்யிடம் பேசி வாழ்த்து கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, முதல்வராக பதவியேற்றுக்கொண்டதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பதாக பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் விஜய்க்கு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்" என்று பதிவிட்டு இருந்தார்.
மோடியின் இந்த பதிவுக்கு முதல் அமைச்சர் விஜய்யும் தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டு இருந்தார். விஜய் வெளியிட்ட பதிவில், "முதலமைச்சராக பொறுப்பேற்ற எனக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்த அவருக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களின் நலனும் முன்னேற்றமுமே எங்களின் ஒரே குறிக்கோளாகும். தமிழ்நாட்டின் தொடர் வளர்ச்சிக்கு, மத்திய அரசின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம" என்று பதிவிட்டு இருந்தார்.














Click it and Unblock the Notifications