வந்தாச்சு தாம்பரம்-செங்கோட்டை அதிவேக ரயில்.. ஸ்பெஷல் என்ன? டாப் தகவல்கள்
சென்னை: பிரதமர் மோடி இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த வகையில் தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் தாம்பரம் - செங்கோட்டை இடையேயான புதிய விரைவு ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். இந்த ரயிலின் கட்டணம் எவ்வளவு என்பதையும், எங்கெல்லாம் இந்த ரயில் நின்று செல்லும் என்ற விவரங்களை பார்ப்போம்.
சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் துவங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த வகையில் தாம்பரம் - செங்கோட்டை இடையேயான புதிய விரைவு ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் இந்த ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் கட்டணம் எவ்வளவு மற்றும் எங்கெல்லாம் இந்த ரயில் நின்று செல்லும் என்ற விவரங்களை பார்ப்போம்.

* திருவாரூர், காரைக்குடி வழியாக சென்னை தாம்பரம் - செங்கோட்டை இடையே இந்த ரயில் இயக்கப்படுகிறது.
*அம்பை-பாவூர்சத்திரம் வழியாக இந்த ரயில் இயக்கப்படுவது தென்காசி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
*தாம்பரத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு இந்த ரயில் புறப்படும். நெல்லைக்கு மறுநாள் காலை 7.25 மணிக்கும், செங்கோட்டைக்கு காலை 9.30 மணிக்கும் சென்றடையும்.
* ஏப்ரல், மே மாதங்களில் வாரம் ஒரு முறை ரயிலாகவும், பின்னர் ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழன் என வாரம் மூன்று முறை இயக்கப்படும்.

* விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்.
* தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சாதாரண படுக்கை டிக்கெட்டின் விலை ரூ. 405 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு ஏசி ரூ. 985 எனவும், 2-ம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ. 1,505-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சாதரண படுக்கை டிக்கெட் கட்டணம் ரூ. 435, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி கட்டணம் ரூ. 1060, இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி கட்டணம் ரூ. 1620-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications