சர்வதேச பாரதி விழாவில் நாளை பிரதமர் மோடி சிறப்புரை
Subscribe to Oneindia Tamil
சென்னை: இணையவழி நடைபெறும் சர்வதேச பாரதி விழாவில் பிரதமர் மோடி நாளை சிறப்புரையாற்றுகிறார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138 வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் வானவில் கலாச்சார மையம், சர்வதேச பாரதி விழாவை நாளை மாலை 4.30 மணிக்கு இணையவழி நடத்துகிறது. இந்த விழாவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த பாரதியார் விழாவில் சர்வதேச அளவிலும், நாடு தழுவிய அளவிலும் பல கவிஞர்களும், கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி இருந்தார்.
லடாக் எல்லையில் ராணுவ வீரர்களிடையே உரையாற்றும் போது கூட பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications