திமுக கூட்டணிக்கு நூல் விட்டு பார்த்த பாஜக.. ஸ்டாலின் முடிவு இதுதான்! இவர் என்ன இப்படி சொல்லுறாரே!
சென்னை: பாஜகவிற்கு 270+ இடங்கள் கிடைக்கும் என்றால் அவர்கள் ஏன் திமுகவிடம் ரகசியமாக பேச வேண்டும். திமுகவிடம் ரகசியமாக பாஜக பேச முயல்வதாக செய்திகளை போட்டு பாஜக தூண்டில் போட்டு பார்க்கிறது என்று சிபிஎம் கனகராஜ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும்.

கடந்த முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் புதிதாக 67 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த முறை வென்ற இடங்களில் சில தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் கூடுதலாக புதிய இடங்களில் வெல்ல வேண்டும்.
சிக்கல் மேல் சிக்கல்: அதே சமயம் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று இன்னும் சில கருத்து கணிப்பாளர்கள் தெரிவிக்கின்றன . இன்னும் சிலர் என்டிஏ கூட்டணிக்கே கூட மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாஜகவின் பிளான் பி எப்படி இருக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் திமுகவின் உதவியை கூட பாஜக நாட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வருகின்றன.
பேட்டி: இது தொடர்பாக சிபிஎம் கனகராஜ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பாஜகவிற்கு 270+ இடங்கள் கிடைக்கும் என்றால் அவர்கள் ஏன் திமுகவிடம் ரகசியமாக பேச வேண்டும். திமுகவிடம் ரகசியமாக பாஜக பேச முயல்வதாக செய்திகளை போட்டு பாஜக தூண்டில் போட்டு பார்க்கிறது. திமுகவை ஒழிப்பேன் என்று கூறிவிட்டு அவர்களிடம் தூது போவது பாஜக ஏன் செல்ல வேண்டும். திமுக போகாது. திமுக கண்டிப்பாக பாஜகவுடன் போகாது என்று தெரியும்.

திமுகவிற்கு அப்படி எந்த நிலைப்பாடும் இல்லை. திமுக இந்தியா கூட்டணியில் உள்ளது. அதில் நீடிக்கும்.
ஆனால் பாஜக விடாமல் எல்லோரிடமும் போய் பேசிக்கொண்டு இருக்கிறது. எப்படியாவது கூட்டணி வேண்டும் என்று போய்க்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் நிலைமை. பாஜகவிற்கு 270+ இடங்கள் கிடைக்கும் என்றால் அவர்கள் ஏன் திமுகவிடம் ரகசியமாக பேச வேண்டும்.
வெற்றிபெற போகிறோம் என்று அவர்கள் கூலாக இல்லை. அவர்களிடம் பதற்றம் உள்ளது. உத்தர பிரதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசியை அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சனையாக மாற்றிவிட்டனர். இதை கவுண்டர் செய்ய மோடி திணறுகிறார். அதோடு பாஜகவிற்கு சிக்கலே அவர்களின் கோர் டீமை அவர்களால் வேலை பார்க்க வைக்க முடியவில்லை.
இந்த முறை பாஜக 270 எடுத்தால் கூட ஆட்சி அமைக்க முடியாது. பாஜக 270 எடுத்தால் கூட என்டிஏ கூட்டணி இருக்காது. என்டிஏ கூட்டணி உடையும், என்று சிபிஎம் கனகராஜ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications