வரப்புயர நீர் உயரும்.. நீர் உயர நெல் உயரும்.. ஆயுதம் செய்வோம்.. ஔவை, பாரதி பாடலை பாடிய மோடி!
சென்னை: கல்லணையின் சிறப்புகளையும் உள்நாட்டில் உற்பத்தியை செய்ய கூற ஔவையார் பாடிய பாடலை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார்.
சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். அவர் தமிழில் வணக்கம் கூறி தனது உரையை தொடங்கினார்.
அவர் கூறுகையில் கல்லணை கால்வாயை சீரமைக்கும் திட்டம் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு எனது பாராட்டுகள்.

நெற்களஞ்சியம்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்லணை நெற்களஞ்சியத்தின் உயிர்நாடி. ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமித்து பராமரிக்க வேண்டும். நீர் ஆதாரங்களை சேமிப்பது என்பது உலகாயுத பிரச்சனை என தெரிவித்த மோடி ஔவையாரின் பாடலை மேற்கோள்காட்டினார்.

இதுதான் வரிகள்
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
என்று ஔவையாரின் பாடலை மேற்கோள்காட்டினார். இதன் அர்த்தம் விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால் நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறைய தங்கினால் நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

வரிகளின் அர்த்தம்
எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படி சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாக போற்றப்பட்டும் மிகுந்த நற்பெயர் பெறுவான் என்பது இந்த வரிகளின் அர்த்தமாகும்.

பாரதி பாடல்
அது போல் சுயசார்பு திட்டத்தை எடுத்துக் கூற பாரதியாரின் பாடலையும் பிரதமர் மோடி பாடி காண்பித்தார். ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம்" என்றும் "உலக தொழிலனைத்தும் உவந்து செய்வோம்" என்று பாரதியார் பாடலையும் மேற்கோள் காட்டி மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications