எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொள்கிறது - டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்னை மூடிக்கொண்டு இருப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார், நகர்ப்புற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் கூட்டங்களில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறவில்லை என்றும் நாற்காலிகளை தூக்கி அடிக்கும் சண்டைகள் தான் நிகழ்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டிவனம் ரொட்டிகார வீதியிலுள்ள 20 வது வாக்கு சாவடி மையத்தில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் அவரது துணைவியார் சரஸ்வதி ஆகியோர் தனது ஜனநாயக குடியுரிமையான வாக்கினை தைலாபுரத்திலிருந்து காரில் வந்து செலுத்தினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமானது என்றும் மக்களே ஆட்சி செய்வதற்காக ராஜீவ் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால் அது முழுமையாக நிறைவேறவில்லை எனவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ,நகர்புறங்களில் தேர்ந்தெடுக்கப்படும் பிரநிதிகள் கூட்டங்களில் ஆரோக்கியமான விவாதம் நடைபெறவில்லை அங்கு நாற்காலிகளை தூக்கி அடிக்கும் சண்டைகள் தான் நிகழ்வதாக குற்றஞ்சாட்டிய அவர் வறுமை ஒழிப்பு, சுகாதாரம் , சாலை அமைத்தல் நடைபெறும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயாட்சி நடைபெற வேண்டும் என்றார்.
ஆனால் சுயாட்சி நடைமுறையில் இல்லை என்றும் ராஜீவ் காந்தி நினைத்தது நிறைவேறவில்லை என்றும் கூறினார். மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் மற்றும் நிதி ஆதாரத்தினை அளிக்க வேண்டும் எனவும் உள்ளாட்சியில் உள்ள பிரதிநிதிகளை எளிதில் பார்க்க முடியும் என்பதால் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்தல் முக்கியமானது என்பதால் உள்ளாட்சி தேர்தலில் 18 வகையான பணிகள் நடைபெறும் என்றும் கூறினார்.
நகர்ப்புற தேர்தலில் பாமக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறிய டாக்டர் ராமதாஸ், எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாகவும் கூறினார். மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பார்த்தால் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என நினைக்க வேண்டும் என்றும் கூறினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications