சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டில் வெட்டி புரட்சியாளர்களுக்கு பஞ்சமில்லை.. ராமதாஸ் சூசக டிவிட்.. யாரை தாக்குகிறார்?

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து செய்திருக்கும் டிவிட் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து செய்திருக்கும் டிவிட் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. திமுக கூட்டணிக்குள் ஏற்பட்டு இருக்கும் சிறிய சலசலப்பு. விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக இடையே ஏற்பட்டு இருக்கும் சின்ன விரிசல்.

PMK founder Dr. Ramadosss tweet erupts a lot of debate on Twitter

பா.ரஞ்சித்தின் ''தனி தொகுதி'' குறித்த அரசியல் பேச்சு. அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் பதில் என்று தொடர்ச்சியாக நிறைய விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சைலண்ட் மோடில் இருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை வைத்து டிவிட் ஒன்று செய்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் புரட்சியாளர்களுக்கு பஞ்சமில்லை. புதிது புதிதாக புரட்சியாளர்கள் உருவாகி வருகின்றனர். தமிழகத்தில் வேலையில்லாத பொறியாளர்களின் எண்ணிக்கையை முறியடிக்க வேண்டும் என்றால் அது வெட்டி வேலை செய்யும் புரட்சியாளர்களால் தான் சாத்தியம் ஆகும், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ராமதாஸின் இந்த கருத்து அரசியல் களத்தில் நிறைய விவாதங்களை கிளப்பி இருக்கிறது. சாதியையும், அரசியலையும் மையமாக வைத்து தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் ராமதாஸ் எதை பற்றி பேசுகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.

புரட்சியாளர்களுக்கு பஞ்சமில்லை என்று இவர் யாரை குறிப்பிடுகிறார், யாரை மறைமுகமாக தாக்குகிறார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

English summary
PMK founder Dr. Ramadoss's tweet erupts a lot of debate on Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X