உயிர்களைக் காக்க உருவெடுத்த உன்னத தேவதைகள்.. கண்டிப்பாக இதனை செய்யனும்.. அன்புமணி வைக்கும் கோரிக்கை
சென்னை: உயிர்களைக் காக்க உருவெடுத்த உன்னத தேவதைகளின் குறைகள் களையப்பட வேண்டும் என செவிலியர் தினத்தையொட்டி பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் உயிரையும், சுகாதாரத்தையும் பேணிக்காப்பதிலும் மருத்துவ சமுதாயத்தின் உயிர்நாடியாக திகழ்ந்து கொண்டிருக்கும் செவிலியர்கள் பெருமையை போற்றும் வகையில் இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.

செவிலியர் தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் முக ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணி நிரந்தரம் செய்தல், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு என மருத்துவத்துறையில் தொடரும் நீண்டநாள் குறைபாடுகளை களைந்து தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் நம் உயிரை காக்கும் செவிலியர்கள் அனைவரும் மனநிறைவுடன் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
உயிர்களைக் காக்க உருவெடுத்த உன்னத தேவதைகளின் குறைகள் களையப்பட வேண்டும் என செவிலியர் தினத்தையொட்டி பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்," என் கடன் மனித உயிர்களைக் காப்பதே என்று உறுதியேற்று இரவு பகல் பாராமல் நோயர்களுக்கு சேவை செய்யும் உன்னத தேவதைகளான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் நாளில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் ஈடு இணையற்ற சேவை என்றால் அது செவிலியர் பணி தான். ஆனால், அதற்கேற்ற ஊதியமும், அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்தக் குறையை போக்கும் நோக்குடன் தான் நடப்பாண்டுக்கான உலக செவிலியர் நாளை '' நமது செவிலியர்கள், நமது எதிர்காலம், கவனிப்பின் பொருளாதார சக்தி (Our Nurses. Our Future. The economic power of care)" என்ற தலைப்பில் கொண்டாட உலக செவிலியர்கள் கவுன்சில் தீர்மானித்துள்ளது.

அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தான் இதன் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செவிலியர்கள் அனுபவித்து வரும் குறைகளைக் களைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications