தமிழகம் முழுவதும் தொடங்கிய பாமக ஆர்ப்பாட்டம்! சென்னையில் ராமதாஸ் பங்கேற்பு
சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரியும் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் இன்று போராட்டம் தொடங்கியது. வன்னியர்களுக்கு துரோகம் இழைக்காதே, அநீதி செய்யாதே என்ற வாக்கியங்கள் இடம்பெற்ற பதாகைகளை பாமகவினர் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
இதுகுறித்து அவர் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "38 மாவட்டங்களிலும் அமைதி வழியில் போராட்டம் பெரிய அளவில் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தால் சென்னையே குலுங்க போகிறது. அமைதி வழி போராட்டத்தில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் சிறை செல்வது போல் வேற மாதிரியான போராட்டங்களை முன்னெடுப்போம்.

நீங்கள் அமைதியாகவே போராட்டம் நடத்துங்கள் நான் 10.5 சதவீதம் கொடுத்து விடுகிறேன் என தமிழக முதல்வர் ஆணையிடுவார் என்று எதிர்பார்க்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 4 முதல் ஆறு மாதங்கள் இருப்பதால் இடஒதுக்கீடு கிடைக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்சியும் சின்னமும் அன்புமணி தரப்புக்குத்தான் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி முதல் அன்புமணி, விருப்பமனுக்களை பெறுகிறார். இதுகுறித்து ராமதாஸிடம் கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications