உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய் உறங்கிவிட்டது.. பிரணாப் முகர்ஜி மறைவிற்கு வைரமுத்து இரங்கல்!
சென்னை: உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய் உறங்கிவிட்டது, பாரதத்தின் உயரங்களை வளர்த்தெடுத்த பாரத ரத்னா விடைகொண்டார் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். டெல்லியில் கண்டோன்மெண்ட் பகுதியில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் இவர் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு மூளை குழாயில் அடைப்பு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இவரின் உடல் நாளுக்கு நாள் நலிவடைந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

கட்சி பாகுபாடு இன்றி பலரிடம் பிரணாப் முகர்ஜி நெருக்கமாக பழகி வந்தார். இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு தற்போது கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கமாக டிவிட் செய்துள்ளார். அதில்,
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு
இந்தியா எழுந்து நின்று மெளனிக்கிறது.
உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய்
உறங்கிவிட்டது.
பாரதத்தின் உயரங்களை வளர்த்தெடுத்த
பாரத ரத்னா விடைகொண்டார்.
போய் வாருங்கள் பிரணாப்!
இந்தியா உங்களை
நீண்டகாலம் நினைக்கும்.
என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications