தாதா சாகேப் பால்கே விருது- ரஜினி அடுத்த சிகரம் அடைவதற்கான ஆக்சிஜன்.. : கவிஞர் வைரமுத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது அவர் அடுத்த சிகரம் அடைவதற்கான ஆக்சிஜன் என்று கவிஞர் வைரமுத்து வாழ்த்தியுள்ளார்.
ரஜினிக்கு மத்திய பாஜக அரசு இன்று தாதா சாகேப் பால்கே விருது அறிவித்தது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் தொடர்ந்து ரஜினிகாந்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து:
தாதா சாகேப் பால்கே விருதுபெறும்
ரஜினிக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த விருது
அவரது கலைப்பயணத்தின்
முற்றுப்புள்ளி என்று கருதிவிடமுடியாது.
அடுத்த சிகரம் அடைவதற்கான
ஆக்சிஜன் என்று கருத வேண்டும்;
அவர் கருதுவார்..
@rajinikanth
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications