Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தை.. மாணவிகளுக்கு மூளைச்சலவை.. பெண் பக்தர் சுஷ்மிதாவை தூக்கிய போலீசார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவசங்கர் பாபாவுக்கு உடைந்தையாக இருந்த பெண் பக்தர் சுஷ்மிதாவை போலீசார் கைது செய்தனர். சுஷ்மிதா மாணவிகளை மூளைச்சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்து வந்துள்ளார்.

Recommended Video

    Sivashankar Baba பற்றியான உண்மை வெளிவரும்: Sushil Hari School Teachers Press Conference

    சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா டபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமானது.

    சுஷில் ஹரி பள்ளி மாணவிகள் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதால் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அதிரடி கைது

    அதிரடி கைது

    இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார், டேராடூனில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை பிடிக்க விரைந்தனர். ஆனால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிவசங்கர் பாபா அங்கு இருந்து தப்பினார். ஆனால் தலைநகர் டெல்லியில் வைத்து அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    தீவிர விசாரணை

    தீவிர விசாரணை

    பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மேலும் அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடந்தினார்கள். சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். இதற்கிடையே சிவசங்கர் பாபாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் முதலில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பெண் பக்தை கைது

    பெண் பக்தை கைது

    பின்னர் அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவசங்கர் பாபாவை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு உடைந்தையாக இருந்த அவரின் பெண் பக்தர் சுஷ்மிதாவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    மாணவிகளுக்கு மூளைச்சலவை

    மாணவிகளுக்கு மூளைச்சலவை

    பெண் பக்தர் சுஷ்மிதா, சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியின் முன்னாள் மாணவி என்றும் கூறப்படுகிறது. சிவசங்கர் பாபாவின் பாலியல் அத்துமீறல்களுக்கு எல்லாம் உடைந்தையாக இருந்துள்ளார் சுஷ்மிதா. பள்ளி மாணவிகளை மூளைச் சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்து வருவதுதான் சுஷ்மிதாவின் மெயின் வேலையாக இருந்ததாக கூறப்படுறது. சுஷ்மிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+