கே.எஸ்.அழகிரி மீது பாய்ந்த 3 வழக்குகள்! என்னென்ன பிரிவு? கூட்டணிக் கட்சி ஆட்சியில் அதிரடி ஆக்ஷன்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 238 காங்கிரஸார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.
ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், சென்னையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றார் கே.எஸ்.அழகிரி. அவருடன் திரளான காங்கிரஸ் தொண்டர்களும் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

சென்னை எழும்பூரில் மறியல் போராட்டம் நடத்த முயன்றதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்றுகூடல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கே.எஸ்.அழகிரி உட்பட காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் நேற்றைய தினம் போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் மீது வழக்குப் பாய்ந்துள்ளது. இதனிடையே போராட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்பதை முன்கூட்டியே அறிந்து தான் காங்கிரஸ் கட்சியினரும் அதில் ஈடுபட்டனர்.
குஜராத்தில் நீதி கிடைக்காது என்பது தங்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் உச்சநீதிமன்றத்தின் மூலம் நீதியை பெற்றுக்கொள்வோம் எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். இதனிடையே ராகுல்காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த போது கும்பகோணத்தில் 4 பேருடன் கே.எஸ்.அழகிரி ரயில் மறியல் செய்த படம் வைரலானது.
அதுபோல் நடந்துவிடக் கூடாது என்பதால், நேற்றைய தினம் முன்கூட்டியே தொண்டர்களை திரட்டி வைத்திருந்தார் கே.எஸ்.அழகிரி. தமிழகத்தில் கூட்டணிக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் சூழலிலும் யாருடைய தலையீடும் இல்லாமல் காவல்துறையினர் காங்கிரஸார் மீது இந்த வழக்கைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் ஆட்சியிலும் காவல்துறை அத்துமீறல்! தென்காசியில் போலீஸ் தாக்கியதில்.. விவசாயி சோக முடிவு! -
விவசாயி எடுத்த சோக முடிவு.. தென்காசி சிவகிரி இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த ஆக்ஷன்! -
போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆகி 'கருப்பு' படம் பார்த்த கைதி.. தியேட்டர் இன்டர்வெல்லில் கிளைமாக்ஸ்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications