திரை உலகினருக்கு போதைப்பொருள் விநியோகமா? சிம்புவின் Ex மேலாளரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
சென்னை: ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளரும் நடிகர் சிம்புவின் முன்னாள் மேனேஜருமான சர்புதினை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். யார் யாருக்கெல்லாம் போதைப்பொருள் விநியோகம் செய்தார் என்ற கோணத்தில் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போதைப்பொருள் வழக்கில் கைதான திரைப்பட இணை தயாரிப்பாளரும் நடிகர் சிம்புவின் முன்னாள் மேலாளருமான சர்புதீனை போலீசார், காவலில் எடுத்து விசாரணை செய்து வருகிறார்கள். திரை உலகில் யார் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை செய்தார் என்பது உள்ளிட்ட கோணங்களில் சர்புதீனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

போதைப்பொருள் விற்பனை செய்ததாக சர்புதீன் மற்றும் முகப்பேரை சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தை சேர்ந்த சரத் ஆகியோரை கடந்த மாதம் 20 ஆம் தேதி, திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். அப்போது சிம்புவின் மேலாளராக இருந்த சர்புதீனின் காரில் இருந்து ரூ.25 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல, கைதான சீனிவாசன் என்பவரிடமிருந்து 10 கிலோ ஒஜி கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்த நிலையில், தற்போது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சர்புதீன் நடிகர் சிம்புவிற்கு ஏற்கனவே மேலாளராக பணியாற்றியதும் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அதுமட்டும் இன்றி பல நடிகைகள், நடிகர்களுடன் பழக்கம் உடையவர் என்பதால், போதைப்பொருள் யார் யாருக்கெல்லாம் சப்ளை செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் வைத்து பார்ட்டி நடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுவதால் அதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications