தேர்தல் ஆணையருடன் அரசியல் கட்சிகள் வைத்த கோரிக்கை என்ன? சத்யபிரதா சாகு பேட்டி
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகள் வைத்த கோரிக்கை என்னவென்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என்று எதிபார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வரங்களே பாக்கியிருப்பதால் தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாநில வாரியாக சென்று அரசியல் கட்சிகளின் கருத்துக்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான 2 நாட்கள் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. சென்னை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ராஜீவ்குமார் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது லோக்ச்பா தேர்தல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை தலைமை தேர்தல் கமிஷனரிடம் அரசியல் கட்சியினர் முன்வைத்தனர். தலைமை தேர்தல் ஆணையருடனான ஆலோசனையில் கலந்து கொண்ட பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஒரே கட்டமாக தேர்தல் கோரிக்கை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications