“வெறும் GD பாலம் என்றா பெயர் வைக்க முடியும்? புரியாமல் குறுக்குசால் ஓட்டக்கூடாது” - தங்கம் தென்னரசு
சென்னை: "ஜி.டி.நாயுடு பாலம் என்பதை ஜி.டி பாலம் என்று எப்படி வைக்க முடியும்?" என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பொது இடங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளின்படி ஊர்கள், தெருக்கள், சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் மற்றும் பொது கூட்டகட்டமைப்புகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி மறு பெயரிடுவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் இதுகுறித்து பேசப்பட்டது.

இதற்கிடையே கோவையில் 10 கி.மீ தொலைவுக்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். ரூ.1,791 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான இந்த மேம்பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதல்வர் திறந்து வைக்கும் பாலத்தில் சாதி பெயர் இருக்கலாமா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஊர்கள், தெருக்கள், சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்தப் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே இதனை திரித்துக் கூறுகிறார். சாதிப் பெயர்களை நீக்கும் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். அவ்வாறு அரசியல் செய்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகம். சாதிப் பெயர்களை நீக்க நீதிமன்ற அமைப்புகளும் சொல்லியிருக்கின்றன. வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து பகுதிகளிலும் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படும். நாங்கள் இதை அரசியல் காரணங்களுக்காக செய்யவில்லை.
கோவை மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததை குறையாக சொல்வதா? மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டவர் ஜி.டி.நாயுடு. நாயுடு என்பதை நீக்கிவிட்டு ஜி.டி. என்ற பெயரை எப்படி வைக்க முடியும்? ஜி.டி.நாயுடு பாலம் என்று வைத்தால்தான் அவர் யார் என்பதை அறிய முடியும். அவர்கள் எவ்வாறு அறியப்பட்டார்களோ அப்படி குறிப்பிட்டால் தான் சந்ததிகள் அறிந்துகொள்ள முடியும். இவற்றை விதி விலக்குகளாகவே கருதப்பட வேண்டும் என்பதுதான் நடைமுறை.
எடப்பாடி பழனிசாமி மற்றும் இன்னும் சிலரும் இதனை விமர்சிக்கின்றனர். இதில் அரசியல் செய்து குறுக்குசால் ஓட்டுவது கண்டிக்கத் தக்கது. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், எந்த நோக்கத்துக்காக அரசாணை வெளியிடப்பட்டது என்றும், பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் ஏன் வைக்கப்பட்டது, அது விதி விலக்கு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications