பொங்கல் பண்டிகை.. டாஸ்மாக்கில் மது விற்பனை படுஜோர்.. 4 நாட்களில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்களில் மட்டும் ரூ.850 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்று உள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 140 கோடி ரூபாய் அதிகம் ஆகும். நகர்புறங்களை விட கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில்தான் விற்பனை அதிக அளவில் நடைபெற்று இருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை படு ஜோராக நடைபெறும். பொங்கல் மற்றும் தீபாவளியை மதுப் பிரியர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள் என்பதால் டாஸ்மாக்கில் மதுபான விற்பனையானது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணமே உள்ளது.

டாஸ்மாக் மது விற்பனை
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கடந்த 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. 5 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பொங்கலை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். வழக்கம் போல டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை படு வேகமாக நடந்துள்ளது.
கடந்த ஆண்டை விட ஒப்பிடும்போது இந்த ஆண்டு மது விற்பனை அதிகமாக நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த ஆண்டு பொங்கல் விடுமுறை நாட்களில் மட்டும் ரூ.850 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 140 கோடி ரூபாய் அதிகம் ஆகும்.
2 நாட்களில் ரூ.519 கோடிக்கு விற்பனை
போகி பண்டிகை மற்றும் பொங்கல் என இரண்டு நாட்களில் மட்டும் 519 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன. 16 ஆம் தேதி மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் விடாத குடிமகன்கள் 15 ஆம் தேதியே வாங்கி ஸ்டாக் வைத்தனர். இதனால், விற்பனை அன்றைய தினம் அசுர வேகத்தில் நடைபெற்றது.
காணும் பொங்கல் தினத்திலும் மதுவிற்பனை வழக்கம் போலவே அதிகமாக இருந்தது. நகரங்களை விட கிராமப்புறங்களில் மது விற்பனை அதிக அளவு இருந்தது. பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் பலரும் சொந்த ஊர் சென்றதால், கிராமங்களில் உள்ள மதுக்கடைகளில் இரவு வரை மது விற்பனை களை கட்டியது.
நேற்று பொங்கல் விடுமுறை முடிந்து அனைவரும் பணிக்கு திரும்பத் தயாரானதால், மது விற்பனை குறைந்துள்ளது. இப்படியாக கடந்த 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை நடைபெற்றுள்ளது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications