பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கவில்லையா? இன்று முதல் ரூ.3000 வாங்கி கொள்ளலாம்.. ரூல்ஸ் என்ன!
சென்னை: பொங்கல் முடிந்தாலும் கூட பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறாதவர்கள் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ₹6,936.18 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் விடுபட்டவர்கள் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம். அதற்கான விதிமுறைகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்கள் பொங்கலைக் கொண்டாட ஏதுவாக சிறப்புப் பொங்கல் தொகுப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. 2.22 கோடி அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்பட்டு வந்தது. அத்தோடு ரூ.3000 ரொக்கம் தரப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் கடந்த 8ம் தேதி இந்தப் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ₹6,936.18 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுக்க பொங்கலுக்கு முன்பே பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கிட்டத்தட்ட 90% மக்களுக்குப் பொங்கலுக்கு முன்பே இந்தத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டது.
இருப்பினும் பல மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவுக்குப் பொதுமக்கள் பொங்கல் பரிசைப் பெறவில்லை. அதிகபட்சமாகத் தென் சென்னை மாவட்டத்தில் 59,000 அட்டைதாரர்கள் இன்னும் பொங்கல் பரிசைப் பெறவில்லை. அதேபோல தேனியில் 22,000, மதுரையில் 44,000, திருநெல்வேலியில் 32,000 அட்டைதாரர்களும் பொங்கல் பரிசைப் பெறவில்லை. சில மாவட்டங்களில் 10,000க்கும் குறைந்த எண்ணிக்கையில் பொங்கல் பரிசு பெறாமல் இருக்கிறார்கள்.
சுமார் 7.6 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் தொகுப்பு சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே பொங்கல் முடிந்த பிறகும், கூட மீதம் உள்ளோர் பொங்கல் பரிசைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று முதல் அவர்களுக்கும் தங்கள் பொங்கல் பரிசை ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம். அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
₹3,000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு, வேட்டி மற்றும் சேலைகள் ஆகியவை வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள விடுபட்ட மக்கள் இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் முடிந்த பிறகு, பொங்கல் தொகுப்பை எப்படி வாங்குவது என்ற சந்தேகம் பலருக்கும் வரும்! அது ரொம்பவே ஈஸி.. உங்கள் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட்டு இருக்கும். அந்த டோக்கனை ரேஷன் கடைகளில் கொடுத்துப் பொங்கல் தொகுப்பைப் பெறலாம். ஒருவேளை டேக்கன் வழங்கப்படும்போது வீடுகள் பூட்டப்பட்டு இருந்தால் மீண்டும் ரேஷன் கடைக்கே அதை எடுத்துச் சென்றுவிடுவார்கள். அங்குச் சென்று விசாரித்தாலே உங்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும்!
-
செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
காலியாக போகும் காவிரி.. வேலையை காட்டும் வெயில்! இந்த வருஷம் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்! -
மேகதாது அணை.. உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் மனு தள்ளுபடியை வெற்றி என கொண்டாடிய சித்தராமையா! -
மாநில தகவல் ஆணையர்களாக அதுல்ய மிஸ்ரா, அபய் குமார் சிங்.. ஆளுநர் ரவி முன்னிலையில் பதவியேற்பு! -
R.N.Ravi: தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியின் சர்ச்சைகள்! 2021 - 2026 வரை நடந்தது என்ன? -
நீலகிரியில் தமிழக பகுதிக்கு உரிமைக் கொண்டாடும் கேரளம்! எல்லையில் பதற்றம்! தவாக வேல்முருகன் கண்டனம் -
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட். சென்னை vs மற்ற ஊர்களில் சம்பளம் அடியோடு மாறுது -
Population Census: தமிழகத்தில் ஜூலை 17 முதல், மக்கள்தொகை கணக்கெடுப்பு! அரசிதழில் அறிவிப்பு -
மிகக்குறைந்த விலையில் நாப்கின்கள்? ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு தகவல் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்?












Click it and Unblock the Notifications