Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணையை தொடங்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இறுதி விசாரணை துவங்கியுள்ளது.

கடந்த 1996-2001 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Ponmudi case Chennai highcourt

விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ, வழக்கை வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படாத நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் விளக்கத்தை கேட்காமல் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு குற்றம் சாட்டப்பட்டவர் பொறுப்பாக மாட்டார் எனவும் வாதிட்டார்.

மேலும், ஏற்கனவே 70 சதவீதம் விசாரணை முடிக்கப்பட்ட வழக்கில் மீதி விசாரணையை மேற்கொண்டதாகவும், ஐந்து நாட்களில் தீர்ப்பளிக்கப்படவில்லை எனவும் வேலூர் நீதிமன்ற நீதிபதி தாக்கல் செய்த மனுவை சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்டத்தின் நிர்வாக நீதிபதிகள், வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியுமா? அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழு முன் வைக்காமல், தலைமை நீதிபதி, வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற ஒப்புதல் வழங்க முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமனுக்கும், பொன்முடி தரப்பு மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோவுக்கும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியும் என்றால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்த முடியாது என்றும் ஐந்து நாட்களில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என்றும் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+