வாரத்தின் முதல் நாளே பவர் கட்.. சென்னையில் 5 மணி நேரம் மின்சாரம் இருக்காது! எந்தெந்த ஏரியா தெரியுமா?
சென்னை: பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னையின் முக்கிய இடங்களில் இன்று 5 மணி நேரம் மின் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், "மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மயிலாப்பூர், அடையாறு, தாம்பரம், கிண்டி, ஆவடி, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் (07.08.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கிண்டி: நங்கநல்லூர் மடிப்பாக்கம், பஜனை கோவில் தெரு, வீரசாமி தெரு, திருமலை தெரு, எத்திராஜுலு தெரு, டாக்டர். அம்பேத்கர் சாலை, ஜீவா நகர், ராஜலட்சுமி நகர், பாரதியார் சாலை, பாவேந்தர் பாரதிதாசன் சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி: இரவிந்திரா நகர், சோழன் நகர், சீனிவாசா நகர், சிவசங்கரபுரம், தென்றல் நகர், மூர்த்தி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தண்டையார்பேட்டை: எண்ணூர் கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், அண்ணா நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம். நகர், உலகநாதபுரம், வ.உ.சி. நகர், நெட்டுக்குப்பம்,தாழங்குப்பம், எர்ணாவூர் குப்பம், சண்முகபுரம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மயிலாப்பூர்: பட்டினம்பாக்கம் சந்தோம் நெடுஞ்சாலை, டுமிங் குப்பம், முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் ரோடு, முத்து தெரு, கச்சேரி ரோடு, பாபநாசம் சாலை, கன்னிலால் தெரு, சோலையப்பன் தெரு, மந்தைவெளி ரோடு, வெங்கடேசா அக்ரகாரம், நல்லப்பன் தெரு, திருவள்ளவர்பேட்டை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையாறு: ஈஞ்சம்பாக்கம் ராஜீவ் காந்தி நகர், காயிதே மில்லத் தெரு, ஆதித்யாராம் நகர், ஜெ. நகர், பனையூர் குப்பம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம்: சித்தாலப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு, மந்தவெளி தெரு, குளக்கரை தெரு, சோமு நகர், தாவூத் நகர், வேளச்சேரி மெயின் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications