Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும் சென்னை மக்களே.. இந்த ஏரியாவில் இன்னைக்கு பவர்கட் இருக்கு! உஷார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக மின் இணைப்பு அவ்வப்போது துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று, சென்னையில் எந்த இடங்களில் மின் வெட்டு ஏற்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் அவ்வப்போது பராமரிபபு பணிகள் காரணமாக மின் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக கோடை காலங்களில் அதிக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பிரச்னை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Power cut Today: An announcement was made regarding the places where power cuts will occur in Chennai today

மிக்ஜாம் புயலால் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக மின் இணைப்புகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் மின் இணைப்பு கிடைக்க 3 நாட்கள் வரை ஆனது. வெள்ளம் தேங்காத பகுதிகளில் 12 மணி நேரத்தில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் வடசென்னையின் பட்டாளம், திருவொற்றியூர், எண்ணூர், தென்சென்னையை ஒட்டியுள்ள சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ளம் முழுமையாக வடிய 3 நாட்கள் வரை ஆனதால், மின் இணைப்பு கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

அதேபோல மின் இணைப்பு பெட்டிகளில் இருந்த மின்னணு கருவிகள் முழுவதுமாக பல இடங்களில் சேதமடைந்துள்ளன. இது தவிர மரங்கள் சாய்ந்ததால் அறுந்து விழுந்த மின் கம்பிகள் போன்றவற்றை மின்சாரத்துறை ஏறத்தாழ முழுவதுமாக சரி செய்திருக்கிறது. இருப்பினும் பராமரிப்பு காரணங்களுக்காக இன்று சென்னையில் சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

அதாவது, மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக தாம்பரம் பகுதிகளுக்குள்பட்ட கடப்பேரி லட்சுமிபுரம், பிள்ளையாா் கோவில் 1 முதல் 3-ஆவது தெரு வரை, நியூ தெரு, சந்திரன் நகா், நாகப்பா நகா், சி.எல்.சி. ஒா்க்ஸ் சாலை, நியூ காலனி 1 முதல் 6-ஆவது பிரதான சாலை,11 முதல் 18-ஆவது குறுக்குத் தெரு, மும்மூா்த்தி நகா், அன்னை இந்திரா நகா், ஜி.எஸ்.டி.சாலை (பாண்ட்ஸ் முதல் காசநோய் மருத்துவமனை வரை), உமையாள்புரம், அம்பேத்கா் நகா், சோழவரம் நகா், நவமணி தெரு, துா்கா நகா் தெருக்கள் மற்றும் குடியிருப்பு வாரியம் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+