மேஜர் அலர்ட்! சென்னை, தாம்பரத்தில் இன்று மின் விநியோகம் இருக்காது.. 2 மணி வரை இங்கெல்லாம் பவர் கட்!
சென்னை: சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களிலும் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். பராமரிப்பு பணிகளுக்காகக் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி இன்றைய தினம் சென்னை நகரில் சில முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (நவம்பர் 14), சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. டி.எச். சாலை, ஜி.ஏ. சாலை, ஆர்.கே. நகர் பகுதி, பழைய வண்ணாரப்பேட்டை பகுதி, தண்டையார்பேட்டை பகுதி, சஞ்சீவராயன் தெரு, கப்பல்போலு தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, தாண்டவராயன் தெரு, கும்மாளம்மன் கோயில் தெரு, எம்.எஸ். நாயுடு தெரு மற்றும் இந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் இருக்காது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று (நவம்பர் 14) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். தாம்பரம் பகுதிக்குட்பட்ட ராதாநகர், கண்ணன் நகர், சஞ்சய் காந்தி நகர், சாந்தி நகர், கணபதிபுரம், சர்ச் ரோடு, பஞ்சாயத்து மார்க்கெட் மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி துவாக்குடி பகுதி, சிவகங்கை மதகுபட்டி பகுதி, கரூர் மேட்டுப்பட்டி பகுதி, அரியலூர் மாவட்டம் கூத்தூர் பகுதி, சேலம் நங்கவல்லி பகுதி, தூத்துக்குடி கடற்கரை சாலை பகுதிகளில் இன்று மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை வரை நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications