ரெடியா இருங்க மக்களே! சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்.. எவ்வளவு நேரம் கரன்ட் இருக்காது?
சென்னை: சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், வியாசர்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

போரூர் பகுதியில் செம்பரம்பாக்கம் மேப்பூர், பெங்களூர் ட்ரங்க் ரோடு, அகரம்மேல், நசரத்பேட்டை, திருமழிசை, மலையம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
வியாசர்பாடி பகுதியில் ஸ்டேன்லி ஃபீடர், ஐபிஎல் ஃபீடர், அண்ணா பூங்கா, எழும்பூர், புளியந்தோப்பு, பி&சி மில்-2, பி&சி மில்-1, வியாசர்பாடி தொழிற்பேட்டை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும், 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மாதந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, நல்ல சாலை, அழகாபுரம், ரெட்டியூர், கோரிமேடு, ஆனைமேடு, ஹஸ்தம்பட்டி ஆகிய பகுதியில் இன்று மின் தடை செய்யப்படும்.
கரூர் மாவட்டத்தில் ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி, கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர், தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று மின் விநியோகம் மாலை வரை நிறுத்தப்படும்.












Click it and Unblock the Notifications