சென்னை மக்களுக்கு மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு.. இன்று மின்தடை எங்கெல்லாம் தெரியுமா? முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மின்வாரியத்தின் பராமரிப்பு பணியின் காரணமாக தாம்பரம், கடப்பேரி, ஆர்கே நகர், ஆவடி, பெருங்குடி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.

மாநிலம் முழுவதும் டேன்ஜெட்கோ (TANGEDCO) சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் இன்று சில இடங்களில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்தடை ஏற்பட உள்ளது.

chennai power cut eb

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 29.08.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கடப்பேரி, ஆர்கே நகர், ஆவடி, பெருங்குடி மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்: கிருஷ்ணா நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், கிருஷ்ணா நகர் 1வது, 8 வது தெருக்கள், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் தெற்கு, ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி, பாலகிருஷ்ணா நகர், முடிச்சூர் சாலையின் ஒரு பநகுதி, பழைய பெங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

கடப்பேரி: எம்இஎஸ் சாலை, கண்ணன் தெரு, யாதவாலன் தெரு, லெ்லை தெரு, ஜிஎஸ்டி சாலை, ரெங்கா தெரு, ஜெயாதெரு, ராஜகோபால் தெரு, சீனிவாச தெர, தாமஸ் தெரு, வடக்கு குளக்கரை, தெற்கு குளக்கரை தெரு, ஜானிகியம்மாள் தெரு, திருவிக நகர் 1 முதல் 3வது தெருக்கள் மற்றும் ஆர்வி கார்டன் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

ஆர்கே நகர்: எஸ்ஏ கோவில், திலகர் நகர், ஆர்கே நகர், இளயமுதலி தெரு, வஊசி நகர், மின்ட், கல்மண்டபம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, காமராஜ் காலனி, பெருமாள் கோவில் தோட்டம், ஆரணி ரங்கன் தெரு, திருநாவுக்கரசு தோட்டம், கோதண்டராமர் தெரு, பசுவைன் தெரு, டிஎச் சாலை பகுதி, ஸ்டான்லி பகுதி, தியாகப்பன் தெரு, டோல்கேட் பகுதி, கன்னிகோவில் பகுதிகளில் ‛பவர்கட்' ஏற்பட உள்ளது.

ஆவடி - பெருங்குடி: ஆவடியை எடுத்து கொண்டால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், காமராஜ் நகர், ஜேி எஸ்டேட், வசந்தம் நகர், பருத்திப்பட்டு, கோவர்த்தன கிரி, அண்ணாமலை நகர் மற்றும் கவுரி நகர் உள்ளிட்ட இடங்களிலும் மின்சாரம் இருக்காது. அதேபோல் பெருங்குடியை பொறுத்தவரை சிபிஐ காலனி, ராமப்பா நகர், பிள்ளையார் கோவில் தெரு, குறிஞ்சி நகர், ராஜலட்சுமி அவனெ்யூ, காமராஜ் நகர், வீராசாமி சாலை, டெலிபோன் நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+