Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இன்று மின்தடை.. காலை 9 மணி முதல் மின்சாரம் இருக்காது.. உங்கள் ஏரியா இருக்கா? இதோ லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள துணை மின்நிலையத்தில் இன்று (ஜுன் 29) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDGO) சார்பில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் மின்வாரியம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது.

chennai maduravoyal ed tangedco

அந்த வகையில் இன்று (ஜுன் 29ம் தேதி) சென்னையில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் சில இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 29.05.2024 (அதாவது இன்று) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை 33/11KV மதுரவாயல் துணைமின் நிலையத்திற்குட்பட்ட அஷ்டலஷ்மி நகர் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் (CMRL) திட்டப்பணிக்காக 110 கி.வோ. உயர் அழுத்த மின் பாதை மாற்று வழி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இந்த பணியின் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் காலை 9 மணிக்கு நிறுத்தப்படும். மதியம் 02.00 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். அதன்படி (11kv அஷ்டலஷ்மி நகர்) கணேஷ் நகர், ஏகாம்பரம் எஸ்டேட், பெருமாள் கோவில் தெரு, கற்பக விநாயகர் காலனி, கிருஷ்ணமாச்சாரி நகர், அஷ்டலட்சுமி நகர், பாக்கியலட்சுமி நகர், ஸ்ரீதேவி நகர், பொன்னியம்மன் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் மின்வினியோகம் இருக்காது.

அதேபோல் (11kv ஆலப்பாக்கம்) ஆலப்பாக்கம் மெயின் ரோடு, சுந்தர் நகர், கோவிந்தப்பநாயக்கன் தெரு, ஐயாவு நாயக்கன் தெரு, மகாத்மா காந்தி தெரு, ராஜிவ் காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டிய பணிகளை இன்று காலை 9 மணிக்குள்ளேயே முடித்து விட வேண்டும். இல்லாவிட்டால் மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+