ஐந்து மணி நேரம் மின்சாரம் இருக்காது..சென்னையில் நாளை மறுநாள் எங்கெல்லாம் பவர்கட்.. விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செப்டம்பர் 29ம் தேதி அன்று (வெள்ளிக்கிழமை) கிண்டி, அம்பத்தூர், வியாசர்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐந்து மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட அறிவிப்பினை பார்ப்போம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னையில் (29.09.2023 வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, அம்பத்தூர், வியசார்பாடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்த பின்னர் மின் விநியோகம் அளிக்கப்படும்.

power supply will be suspended for five hours in Chennai On September 29

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று மின் தடை மேற்கொள்ளப்படும் பகுதிகள் எவை எவை என்பதை இப்போது பார்ப்போம்.

கிண்டி: தில்லை கங்கா நகர் வாணுவம்பேட்டை காந்தி தெரு, பாரதியார் தெரு, திருமலை தெரு, செந்தில் ஆண்டவர் தெரு, ஏ.ஜி.எஸ் காலனி 7 மற்றும் 8வது குறுக்கு தெரு, ஸ்ரீநகர் காலனி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அம்பத்தூர்: டி.ஐ. சைக்கிள் வெங்கடாபுரம், விஜயலட்சுமிபுரம் மேனாம்பேடு ஒரகடம், காந்தி மெயின் ரோடு, கிழக்கு மற்றும் மேற்கு பாலாஜி நகர், புதூர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும்.

வியசார்பாடி: மாத்தூர் மஞ்சம்பாக்கம், அசிஸ் நகர், அகர்சன் காலேஜ் ரோடு, பாயசம்பாக்கம், தனலட்சுமி நகர், எம்.எம்.டி.ஏ, ஆவின் குடியிருப்புகள், காமராஜ் சாலை மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாளை மிலாடி நபி, அரசு விடுமுறை தினம் என்பதால் மின்வாரியம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. அதனால் நாளை சென்னையில் மின் தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+