சென்னையில் இன்று ஐந்து மணி நேரம் மின்சாரம் இருக்காது. எங்கெல்லாம் பவர்கட்.. முழு விவரம்
சென்னை: சென்னையில் இன்று கிண்டி, அம்பத்தூர், வியாசர்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐந்து மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட அறிவிப்பினை பார்ப்போம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னையில் (29.09.2023 வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, அம்பத்தூர், வியசார்பாடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்த பின்னர் மின் விநியோகம் அளிக்கப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று மின் தடை மேற்கொள்ளப்படும் பகுதிகள் எவை எவை என்பதை இப்போது பார்ப்போம்.
கிண்டி: தில்லை கங்கா நகர் வாணுவம்பேட்டை காந்தி தெரு, பாரதியார் தெரு, திருமலை தெரு, செந்தில் ஆண்டவர் தெரு, ஏ.ஜி.எஸ் காலனி 7 மற்றும் 8வது குறுக்கு தெரு, ஸ்ரீநகர் காலனி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அம்பத்தூர்: டி.ஐ. சைக்கிள் வெங்கடாபுரம், விஜயலட்சுமிபுரம் மேனாம்பேடு ஒரகடம், காந்தி மெயின் ரோடு, கிழக்கு மற்றும் மேற்கு பாலாஜி நகர், புதூர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும்.
வியசார்பாடி: மாத்தூர் மஞ்சம்பாக்கம், அசிஸ் நகர், அகர்சன் காலேஜ் ரோடு, பாயசம்பாக்கம், தனலட்சுமி நகர், எம்.எம்.டி.ஏ, ஆவின் குடியிருப்புகள், காமராஜ் சாலை மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
காது மடல் ஓட்டைகளுக்கு ஆபரேஷன்! சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கிய மும்பை இன்ஸ்டா பிரபலம் கைது! -
சென்னை ரிசார்ட்டில் பல் மருத்துவர் செய்த காரியம்.. ₹11 லட்சத்துக்காக பவர் பத்திரத்தில் ஆடிய ஆட்டம்! -
மாற்றி யோசித்த சென்னை குடிநீர் வாரியம்.. வேஸ்ட் தண்ணீரில் 551 கோடி ரூபாய் வருமானம்.. எப்படி ? -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ்












Click it and Unblock the Notifications