சென்னை மக்களே.. இன்று இங்கெல்லாம் மின் விநியோகம் இருக்காது.. மின்சார வாரியம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம், கிண்டி, கே.கே.நகர், தண்டையார்பேட்டை, அடையார் ஆகிய பகுதிகளில் (09.08.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ் நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிகளை சென்னையில் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். பொதுவாக தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் சென்னை மற்றும் தாம்பரத்தில் சில பகுதியில் மட்டும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.

power supply will be suspended some of areas in Chennai today

அதன்படி இன்று எங்கெல்லாம் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்பது குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

பல்லாவரம் தர்கா ரோடு, பெருமாள் நகர், பி.வி. வைத்தியலிங்கம் ரோடு, நெடுஞ்சாலை நகர் சித்தாலப்பாக்கம் மேடவாக்கம் ரைஸ்மில் ரோடு. ஜெயச்சந்திரன் நகர். அண்ணாசாலை, ஜல்லடியான்பேட்டை, பத்மாவதி நகர் ராதா நகர் நியூ காலனி 1 மற்றும் 2 வது குறுக்கு தெரு, சாஸ்திரி காலனி, சோழவர் நகர், நேரு தெரு, நவமணி தெரு, கேஸ் கம்பெனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி: தில்லை கங்கா நகர் நங்கநல்லூர் 2வது மெயின் ரோடு, டி.என்.ஜி.ஒ. ஜீவன் நகர். இந்திரா நகர். பி.எம். மருத்துவமனை புழுதிவாக்கம் திலகர் அவென்யு, ஓட்டேரி சாலை, சுவாமி நகர், நியூ இந்தியா காலனி, இந்து காலனி, உள்ளகரம், ராஜேஸ்வரி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்படும் .

கே.கே.நகர்: கோடம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெரு மற்றும் சூளைமேடு நெடுஞ்சாலையில் மின் விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தி வைக்கப்படும்

தண்டையார்பேட்டை : மணலி கலைஞர் நகர். சி.பி.சி.எல் நகர். பாடசாலை, வையக்காடு. 200 அடி மணலி ரோடு, சடையன்குப்பம், பர்மா நகர், எலந்தணூர், பென்னேரி நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி நகர், எம்.எம்.டி.ஏ. ஆண்டார்குப்பம், வி.பி. நகர், சின்ன மத்தூர் சாலை, மூலச்சத்திரம், பச்சையப்பன் கார்டன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தி வைக்கப்படும்.

அடையார்: கொட்டிவாக்கம் காமராஜ் சாலை, ஈ.சி.ஆர் மெயின் ரோடு, கந்தசாமி நகர் 1 முதல் 5வது தெரு வரை. மணியம்மை தெரு, பி.ஆர்.எஸ் நகர், பாரதி நகர், அம்பேத்கர் தெரு, பூங்கா தெரு, திருவள்ளுவர் தெரு, ஸ்கூல் தெரு, மசூதி தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தி வைக்கப்படும் என தமிழ் நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+