இனிமேல் தான் சூப்பர் சீன் இருக்கு.. நாடாளுமன்றத்தில் பிரவீன் சக்ரவர்த்தி செய்ய போகும் சம்பவம்
சென்னை: சட்டமன்ற தேர்தல் தோல்வி தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டனர். ஒரு மாநிலங்களவை சீட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பிரவீன் சக்ரவர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு ராஜ்யசபா எம்பி ஆகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தமிழகத்தின் உரிமைக்காக என்ன செய்ய போகிறார் என்பது குறித்து பிரவீன் சக்ரவர்த்தி பட்டியலிட்டார்.
ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரவீன் சக்ரவர்த்தி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக - காங்கிரஸின் முதல் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு முதல்வர் ஜோசப் விஜய், தவெக தலைவர்கள், தொண்டர்கள் அனைருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜகவின் சதி
நாடாளுமன்றத்திற்கு இது முக்கியமான காலகட்டம். மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும். மேற்கு வங்கத்தில், பஞ்சாப்பில் என்ன நடக்கிறது என்பதை பாரக்கிறோம். ஒவ்வொரு கட்சியாக உடைத்து, மெஜாரிட்டியை எடுத்து பாஜக நினைக்கிறது. இதன் மூலம் ஒரே நாடு, ஒரே தேர்தல், தொகுதி வரையறை மசோதாக்களை திணித்து செயல்படுத்த பார்க்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதற்கு மோடி அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை தடுக்க பார்க்கிறோம்.
நாடாளுமன்றத்திற்கு தமிழ்நாட்டிற்கு துணிச்சலான, புரிதலான குரல் ஓங்க வேண்டும். அந்த குரலாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமை குரலாக நான் ஒலிப்பேன்.
கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது அணை திட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் எதிர்ப்பு. தமிழக மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நாங்கள் எந்த வகையிலும் ஏற்க மாட்டோம். கர்நாடகாவில் எந்த ஆட்சி நடைபெற்றாலும் மக்களின் பக்கம் தான் நிற்போம். இதில் எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை" என்றார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications