இதுதான் பலம்.. இன்னும் ஒருவாரம் காத்திருங்க.. அப்பறம் பாருங்க.. தேமுதிகவின் அசத்தல் கேம் பிளான்!
இன்னும் ஒருவாரம் தீவிரமாக ஆலோசனை செய்துவிட்டு கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடலாம் என்று தேமுதிக திட்டமிட்டு இருக்கிறது.
Recommended Video
சென்னை: இன்னும் ஒருவாரம் தீவிரமாக ஆலோசனை செய்துவிட்டு கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடலாம் என்று தேமுதிக திட்டமிட்டு இருக்கிறது. சமயங்களில் திமுக அதிமுகவிற்கு அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் மூன்றாவது கூட்டணியை கூட தேமுதிக உருவாக்கும் என்கிறார்கள்.
தேமுதிக, இதுதான் தற்போது தமிழக கட்சிகளையும், தேசிய கட்சிகளையும் ஆட்டிப்படைக்கும் ஒரு சொல். எங்க கூட்டணிக்கு வாங்க, எங்க கூட்டணிக்கு வாங்க என்று மாற்றி மாற்றி தேமுதிகவுக்கு எல்லோரும் அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதனால் சென்னையில் உள்ள விஜயகாந்த் இல்லம் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. எப்போது தேமுதிகவின் நிலைப்பாடு தெரிய வரும் என்று பெரிய கேள்வி எழுந்து உள்ளது.
தேமுதிக உற்சாகம்
தேமுதிக நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது தேமுதிகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக மு.க ஸ்டாலின், பியூஷ் கோயல், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று வரிசையாக எல்லோரும் வந்து விஜயகாந்தை சந்திப்பது தேமுதிகவினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
என்ன கூறினார்
இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தனது பேட்டியில், இன்னும் எந்த கட்சியுடனும் கூட்டணி உடன்படிக்கை ஏற்படவில்லை. எங்களது பலம் என்ன என்று எங்களுக்கு தெரியும். அதை வைத்துதான் நாங்கள் சீட் கேட்கிறோம். மற்ற கட்சியினர் சீட் கேட்கிறார்கள் என்பதற்காக நாங்கள் சீட் கேட்கவில்லை. எங்களை யாருடனும் நாங்கள் ஒப்பிட்டு பார்க்கவில்லை.
இழுபறி
எங்கள் வாக்கு வங்கி சதவிகிதம் நன்றாகவே இருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி எல்லாம் நீடிக்கவில்லை. பேச்சுவார்த்தை சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் தலைவர் விஜயகாந்த் நல்ல முடிவை அறிவிப்பார், என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
என்ன பிளான்
அதன்படி தேமுதிக கண்டிப்பாக திமுக அல்லது அதிமுகவிடம் இருந்து 6 சீட்டிற்கு குறையாமல் வாங்கிவிடும் என்று கூறுகிறார்கள். ஒரு வாரம் இதற்காக கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அதன்பின் ஒரு ராஜ்யசபா தொகுதி உட்பட 6 லோக்சபா தொகுதிகளை கண்டிப்பாக பேசி வாங்கிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
மூன்றாவது அணி பேச்சு
அதே சமயம் இன்னொரு பக்கம் மூன்றாவது அணி குறித்தும் தேமுதிக மறைமுகமாக பேசி வருகிறது. திமுக, அதிமுக வேலைக்கு ஆகவில்லை என்றால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து தேமுதிக கூட்டணி வைத்து மூன்றாவது அணி அமைக்கும் என்று கூறுகிறார்கள். இதற்காகத்தான் பிரேமலதா ஒருவாரம் காத்திருங்கள் என்று கூறினார், என்றும் தெரிவிக்கிறார்கள்.